Vikatan

சுற்றுச் சூழலியலை காக்க 20 வழிகள்...! #WhereIsMyGreenWorld

சுற்றுச் சூழலியலை காக்க  20 வழிகள்...! #WhereIsMyGreenWorld

ம னிதன் வாழ்வதற்கு, அவன் வாழ்கிற சுற்றுச்சூழல் ஆரோக்கியமாக இருப்பதும் மிக முக்கியம். ஆரோக்கியமான சுற்றுச்சூழல் உள்ள பூமியையும், அளவற்ற இயற்கை வளத்தையும் விட்டுச் செல்வதுதான்  நமக்குப் பிறகு வரும் சந்ததிக்கு நாம் செய்யும் மிகப்பெரிய கைமாறு. சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளங்களைக் காக்கும் விஷயத்தில் அரசாங்கம் உடனடியாகக் கடைபிடிக்க வேண்டியவை என்னென்ன...?

தனது ஆலோசனைகளைச் சொல்கிறார்  சூழலியல் களச் செயற்பாட்டாளார் மற்றும் எழுத்தாளர் நக்கீரன்... 1. தமிழர்கள் நிலங்களின் பண்புகளுக்கு ஏற்ப அவற்றை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை... என்று ஐந்து பகுதிகளாகப் பிரித்தார்கள். இதுபோன்ற தொலைநோக்கு பார்வை வேறு எந்த இனத்திலும் கிடையாது. தமிழ்நாட்டின் நிலம் அனைத்தும் பாலையாக மாறிக்கொண்டுவருவதுதான் இப்போதைக்கு நாம் சந்திக்கும் மிக முக்கியமான சுற்றுச்சூழல் பிரச்னை. இதைத் தடுத்து நிறுத்த அரசாங்கம் உடனடியாகத் திட்டங்களை உருவாக்க வேண்டும்.

சுற்றுச் சூழலியலை காக்க  20 வழிகள்...! #WhereIsMyGreenWorld

2. குறிஞ்சி நிலமான மலைப்பகுதிகளில் நம் முன்னோர்  எவ்விதமான வளர்ச்சித் திட்டங்களையும் செயல்படுத்த மாட்டார்கள். காரணம், பூமியின் ரத்தநாளங்களாக இருக்கும் நதிகளின் ஊற்றுக்கண்கள் எல்லாம் மலைகளில்தான் இருக்கின்றன. அங்கிருந்துதான் ஆயிரக்கணக்கான ஓடைகள் உற்பத்தியாகின்றன. எனவே மலையின் இயல்பைக் கெடுக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்கள். ஆனால்,  கோடை வாசஸ்தலம் என்கிற பெயரில் மலையைக் குடியிருப்புப் பகுதியாகவும், வணிகக் தளங்களாகவும், தேயிலைத் தோட்டங்களாகவும் அத்துமீறி ஆக்கிரமித்து வைத்திருக்கிறோம். இவற்றை உடனடியாக நிறுத்த நடவடிக்கை தேவை. 3 குறுகிக்கொண்டே வரும் காடுகளின் பரப்பளவைப் பெருக்க வேண்டும். குறிப்பாக சோலைக்காடுகளின் பெருக்கம் மிகவும் முக்கியம். ஆங்கிலேயர்கள் காலம் முதல் இன்றைய ஆட்சியாளர்கள் வரை யாருக்கும் சோலைக்காடுகள் என்றால் என்னவென்றே தெரியவில்லை. ஆனால், இந்தக் காடுகள்தான், மலைகளில் பெய்யும் மழை நீரை ஆறு மாதங்கள் வரை தேக்கிவைத்து கொஞ்சம் கொஞ்சமாகக் கசியவிடும். இந்தக் காடுகள் இருந்த இடங்கள் எல்லாம் இப்போது தேயிலைத் தோட்டங்கள் ஆக்கிரமித்துவிட்டன. இதை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக்கொண்டு ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். 4. தமிழகத்தில் மலைக்காடுகள் மட்டுமல்ல. கோயில் காடுகளும் இருந்திருக்கின்றன. இவற்றின் பரப்பளவு மூன்று சதுரக் கிலோமீட்டர் முதல் 200 சதுரக் கிலோமீட்டர் வரை. இதற்கான ஆதாரங்கள் இன்றைக்கும் அரசு ஆவணக் கோப்புகளில் இருக்கின்றன. மீண்டும் அதே பரப்பளவுக்கு கோயில் காடுகள் உருவாக்கப்பட வேண்டும். ஏனென்றால் மேற்குத் தொடர்ச்சி மலைக்காடுகளைக் காட்டிலும்  அதிக அளவுக்கு வெப்பத்தைக் குறைப்பதிலும், கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சுவதிலும் கோயில் காடுகள்தான் அதிகப் பங்காற்றுகின்றன.

சுற்றுச் சூழலியலை காக்க  20 வழிகள்...! #WhereIsMyGreenWorld

5. ஆசியாவிலேயே மிகப் பெரிய சமவெளிப் பகுதி தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள்தான். இந்தப் பகுதியில் கிட்டத்தட்ட 5000 வருடங்களுக்கு மேலாக தொடர்ச்சியாக விவசாயம் செய்யப்படுகிறது. உலகத்தில் வேறு எங்கும் தொடர்ந்து 5000 வருடங்களாக ஒரு நிலம் விவசாயத்துக்குப் பயன்படுத்தப்பட்டதாக வரலாறு இல்லை. எனவே டெல்டா மாவட்டங்களை விவசாயப் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். அப்போதுதான் விவசாயத்தைப் பாதிக்கக்கூடிய தொழிற்சாலை அங்கே வர முடியாது. அப்படி அறிவிக்கப்படாததால்தான் மீத்தேன் திட்டம், நரிமணம் எரிவாயு  திட்டங்கள்... போன்றவை விவசாயத்துக்கும் விவசாயிக்கும் பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. 6 நாட்டு மீனவர்கள் கடல் பல்லுயிர் பெருக்கம் பற்றிய அறிவுகொண்டவர்கள். எந்தக் காலத்தில் என்ன வகையான மீனைப் பிடித்தால் கடலில் பல்லுயிர் பெருக்கம் பாதிக்கப்படாது என்பது அவர்களுக்குத் தெரியும். வணிக நோக்கத்தில் மீன் பிடிப்பவர்கள் பயன்படுத்தும் விசைப்படகுகளும், இரட்டை மடி வலைகளும்தான் கடலின் பல்லுயிர் பெருக்கத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக இருக்கின்றன. இதனால் நாட்டு மீனவர்களின் வாழ்வாதாராம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே நாட்டு மீனவர்களை  கடல் பழங்குடியினராக அங்கீகரிக்க வேண்டும். அதன் மூலம் அவர்கள் சில பிரத்யேக உரிமைகளைப் பெறமுடியும். 7. அத்தனை அரசியல் கட்சிகளும், அரசுகளும் மணற்கொள்ளை, இயற்கை வளங்களைச் சூறையாடுதல் ஆகியவை குறித்த தங்களது நிலைப்பாடு என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். தங்களது தேர்தல் அறிக்கைகளிலும், அரசாங்கம் அமைத்த பிறகும் சுற்றுச்சூழல் இயற்கை வளங்களைக் கையாளுதல் சம்மந்தமாக தங்கள் நிலைப்பாடு என்ன என்பதையும் தெரிவிக்க வேண்டும். ஆற்று மணல் எடுத்தல், கிரானைட் எடுத்தல் போன்ற இயற்கை வளங்களைப் பயன்படுத்தும் அளவு குறித்து, ஆண்டுக்கு ஒரு முறை சட்டமன்றத்திலோ பாராளுமன்றத்திலோ 'வெள்ளை அறிக்கை' சமர்ப்பிக்க வேண்டும். அப்போது அவர்கள் குறைத்து சொன்னாலோ அல்லது கூடுதலாகச் சொன்னாலோ மக்கள் கேள்வி கேட்க வசதியாக இருக்கும். 8. உருகுவே, ஈக்வெடார் போன்ற லத்தீன் அமெரிக்க நாடுகளில் இயற்கை வளங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக  எந்த ஒரு திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும், அந்தத் திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்களிடம் பொது வாக்கெடுப்பு நடத்துவார்கள். கையெழுத்து இயக்கத்தை நடத்துவார்கள். 25 சதவிகிதத்துக்கு மேல் எதிர்ப்பு இருந்தால் உடனடியாக அந்தத் திட்டத்தை அரசாங்கம் வாபஸ் பெற்றுக்கொள்ளும். ஆனால், இந்தியாவில் பொதுவாக்கெடுப்பு நடத்தாமல், பொதுமக்கள் கருத்துக்கேட்பு மட்டுமே நடத்துவார்கள். இயற்கை வளங்கள் சம்பந்தமான திட்டங்களைச் செயல்படுத்தும்போது, லத்தீன் அமெரிக்க நாடுகளைப் பின்பற்ற வேண்டும் .

சுற்றுச் சூழலியலை காக்க  20 வழிகள்...! #WhereIsMyGreenWorld

9. நம் நாட்டில் ஒரு வெளிநாட்டுத் தொழிற்சாலை அமைக்கும்போது, அதில் இவ்வளவு வேலைவாய்ப்பு கிடைக்கும், இவ்வளவு வருவாய் பெருகும் என்றெல்லாம் அறிவிக்கிற அரசு, அந்தத் தொழிற்சாலையால் பயன்படுத்தப்படும் மறை நீர் (virtual water) எவ்வளவு என்பதையும் தெரிவிக்க வேண்டும். உதாரணமாக மூன்று நிமிடங்களில் ஒரு கார் தயாரிக்கிறோம் என்று பெருமையாகச் சொல்வார்கள். ஆனால், அந்தக் காரைத் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் தண்ணீரின் அளவு எவ்வளவு தெரியுமா..? சுமார் 4 லட்சம் லிட்டர். மூன்று நிமிடங்கள் ஒரு கார் வீதம் தயாரிக்கப்படும் அத்தனை கார்களும் தமிழகத்தில் பயன்படுத்தப்படுவதில்லை. பெரும்பாலும் வெளிநாடுகளுக்குத்தான் அனுப்பப்படுகின்றன. சென்னையில் குடிதண்ணீர் தட்டுப்பாடு தலைவிரித்தாட காரணம்  ஏன் என்பது இப்போது உங்களுக்கே புரியும். 10. மாநில அரசு எதிர்ப்பு தெரிவித்தால்கூட தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி மத்திய அரசு இயற்கை வளச் சுரண்டல் செய்யும் திட்டங்களை அறிவித்துவிடும். உதாரணம்... டெல்டா மாவட்டம் நரிமணத்தில் இருக்கும் ஓ.என்.ஜி.சி. இதனால் திருவாரூர் மாட்டத்தில் அநேகப் பிரச்னைகள் இப்போதும் இருக்கின்றன. ஆனால், இது மத்திய அரசு திட்டம் என்று மாநில அரசு நழுவிக்கொள்கிறது. ஆனால், இதுபோன்ற திட்டங்களைச் செயல்படுத்தும் அதிகாரத்தை மாநில அரசாங்க வரம்புக்குள் கொண்டு வரவேண்டும். அப்போதுதான் மக்கள் வாழும் இடங்களுக்கு தீங்களிக்கும் திட்டங்களை அப்புறப்படுத்த முடியும். இப்படித்தான் அஸ்ஸாமில் இருந்து 10 ஆண்டுகளுக்கு முன்னால் மக்கள் போராட்டத்தின் மூலம் ஓ என் ஜி.சி திருப்பி அனுப்பட்டது. ஏன் இது மாநில அரசின் வரம்புக்குள் வரவேண்டும் என்றால்... ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காகவாவது மாநில அரசு இதுபோன்ற தீங்குவிளைவிக்கும் திட்டங்களைத் திருப்பி அனுப்பும். 11. புட்டிநீர் விற்பனையை முழுமையாகத் தடைசெய்ய வேண்டும். காரணம், தனியார் செய்யும் இந்த வேலையை ஏன் அரசால் செய்யமுடியாது. தவிரவும், இந்தப் பொறுப்பிலிருந்து அரசாங்கம் தன்னைத் துண்டித்துக்கொள்கிறது என்றுதானே அர்த்தம். எனவே தனியார் செய்யும் தண்ணீர் வியாபாரத்தை முற்றிலும் தடுக்க வேண்டும். 12. ஒரு பகுதியில் வசிக்கும் மக்களின் குடித்தண்ணீருக்கு முதலிடம் கொடுத்துவிட்டுத்தான் அந்தப் பகுதியில் நடக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கு தண்ணீரை பயன்படுத்த வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. உதாரணம் சிவகங்கை மாவட்டம் பரமாத்தூர். இங்கே ஒரு குடம் தண்ணீர் 10 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். ஆனால், கோகோ கோலா கம்பெனிக்கு போர்வெல் போட்டு நிலத்தடி நீரை உறிஞ்ச அனுமதி இருக்கிறது. ஏன் அந்த நீரை சிவகங்கை பகுதி மக்கள் பயன்பாட்டுக்கு அரசாங்கம் வழங்கக் கூடாது. ஆனால், திருச்சி காவிரியில் இருந்து, கூட்டுக் குடிநீர் திட்டம் மூலம் ராமநாதபுரம் சிவகங்கை பகுதிகளுக்கு தண்ணீர் போவது ஏமாற்று வேலைதானே? 13. கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தைக் கைவிட வேண்டும். கடல் நீரைக் குடிநீராக்க பயன்படுத்தப்படும் ஒரு நாள் மின்சாரத்தை வைத்து 10 கிராமங்களின் மின் தேவையைப் பூர்த்தி செய்துவிடலாம். சென்னையின் குடிநீர் தேவை 13 டி.எம்.சி. ஆனால், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டத்தின் மூலம் 2 டி.எம்.சி குடிநீர் மட்டும்தான் கிடைக்கிறது. மீதமுள்ள 11 டி.எம்.சி தண்ணீரை எப்போதும் போல மற்ற பகுதியில் இருந்துதான் பெறுகிறது சென்னை குடிநீர் வாரியம். சென்னைக்கு குடிதண்ணீர் வாங்கும் 29 ஏரிகளில் 10 ஏரிகளைக் காணவில்லை. அந்தப் பத்து ஏரிகளில் இன்றைக்கு நகரமாகிவிட்ட கொளத்தூர், விருகம்பாக்கம் போன்ற பகுதிகள் அடக்கம். மீதமுள்ள ஏரிகளைத் தூர் வாரி அவற்றின் கொள்ளவை உயர்த்தினாலே சென்னை மாநகர மக்களின் குடித்தண்ணீர் தேவை தன்னிறைவை நோக்கி நகர ஆரம்பித்துவிடும். 14. சிறுதானியத்தை ஊக்குவிக்கப்பதுபோல மருத்துவத் துறையில் சித்த மருத்துவத்தை அதிகமாக ஊக்குவிக்க வேண்டும். அப்போதுதான் நமது பாரம்பர்ய மூலிகைகளை மீட்டெடுக்க முடியும். இதனால் சுற்றுச்சூழலும் மேம்படும். டெங்கு, சிக்குன்குன்யா, வைரல் ஃபீவர்... போன்றவற்றுக்கெல்லாம் என்னென்னவோ மருத்துவம் பார்த்துவிட்டு கடைசியில் நாம் வந்து நின்றது நிலவேம்பு கஷாயத்திடம்தான். மூலிகைகள் அதிகமாகப் பயிரிடப்படுவது மானாவாரி நிலங்களில்தான். மானவாரி நில விவசாயத்தில் ரசாயன உரங்களுக்கு வேலையே இல்லை. இதனால் மானாவாரி நிலத்தின் இயல்புத் தன்மை காக்கப்படும்.  

சுற்றுச் சூழலியலை காக்க  20 வழிகள்...! #WhereIsMyGreenWorld

15. கடலோரத்தில் இருக்கும் அலையாத்திக் காடுகள், அக்கறையோடு பராமரிக்கப்பட வேண்டும். சுனாமியைத் தடுத்து அது தரும் ஆபத்தில் இருந்து மக்களைக் காத்தது மட்டும் இதன் முக்கியத்துவம் அல்ல. இன்றைக்கு தமிழகத்தில் மூன்றில் ஒரு பங்கு மக்களுக்கு மீன்கள்தான் உணவு. அவற்றின் மூலம் மட்டுமே மக்களுக்கு புரோட்டீன் சத்து கிடைக்கிறது. அப்படிப்பட்ட 80 சதவிகித மீன் உற்பத்திக்கு அலையாத்திக் காடுகளும், கழிமுகப்பகுதிகளுமே  ஆதாரமாக இருக்கின்றன. தமிழகத்தில் இருக்கும் பிச்சாவரம் - முத்துப்பேட்டை அலையாத்தி காடுகளுக்கு இடையே 14 அனல் மின் நிலயங்கள் அமைக்கும் திட்டம் இருப்பதாக அப்போதை திமுக அரசாங்கம் சொன்னது. பின்னர் வந்த அதிமுக அரசாங்கம், அதைக் கிடப்பில் போட்டுவிட்டது. அந்தத் திட்டத்தை உடனடியாக அரசு கைவிடவேண்டும். ஏனென்றால், இந்த அனல்மின் நிலையங்கள்,  அலையாத்திக் காடுகளுக்கு எமனாக வந்து முடியும். இதனால் மீன் வளம் பாதிக்கப்பட்டு, மீனவர்களின் வாழ்வாதாரமே கேள்விக்குள்ளாகிவிடும். ராமநாதபுரத்தில் இருந்து புதுகோட்டை மாவட்டம் வரைக்கும் உள்ள கடல் பகுதியை சேற்றுக் கடல் என்பார்கள். இது இறால் உற்பத்திக்கு சாதகமான நிலப்பகுதி. காரணம் இவை எல்லாம் ஒரு காலத்தில் அலையாத்திக் காடுகள் இருந்த பகுதிகள்.  16 சென்னை போன்ற மாநரங்களில் வாகனங்களால் உண்டாகும் காற்று மாசு என்பது அபாயகரமாக இருக்கிறது. செயின்ட் தாமஸ் போன்ற உயரமான இடங்களில் நின்று,  இரவு நேரங்களில் பார்த்தால் நகரத்தின் மேலே காற்றில் சிவப்புப் படலம் படர்ந்திருப்பதைக் காண முடியும்... இவை எல்லாம் வாகனங்கள்,  தொழிற்சாலைகள் வெளியேற்றிய கார்பன் மோனாக்ஸைடு. இவை ஓசோன் படலத்துக்குக் கீழே இன்னொரு படலமாகத் தேங்கியிருக்கும். அவ்வளவும் நச்சுக்கள். எனவே வெளிநாட்டுக் கார் கம்பெனிகள் இங்கு வந்து தொழில் தொடங்கும்போது தமிழகம் மற்றும் இந்திய தேவைக்கு ஏற்ப கார்களை உற்பத்தி செய்தால் போதும் என்று புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் குறிப்பிட வேண்டும். ஏனெனில் மூன்று நிமிடங்களுக்கு ஒரு கார் உற்பத்தி செய்யும் அளவுக்கு காரின் தேவை தமிழகத்துக்கோ, இந்தியாவுக்கோ இல்லை. 17. சுற்றுச்சூழலுக்கு மிகப் பெரிய எதிரி பாலீத்தின் பைகள் என்றால், அதைவிட வீரியமான எதிரி சின்னச் சின்ன பாலித்தீன் சாஷேக்கள்தான். இவற்றின் உற்பத்தியைத் தடை செய்யவேண்டும். வீட்டுச் சாக்கடையில் இருந்து பாதளச் சாக்கடை வரை அனைத்திலும் அடைப்புகளை உண்டாக்குவதில் இவற்றின் பங்கு மிக அதிகம். ஒருவர் நாளொன்றுக்கு 15 பாலீத்தீன் பைகள் பயன்படுத்தினால்,  சாம்பு  கவர், பாக்குத் தூள் பாக்கெட், பருப்பு பொடி பாக்கெட், தண்ணீர் பாக்கெட் என பாலீத்தீன் சாஷேக்களை 50-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் பயன்படுத்துகிறோம். இவை மக்காதத் தன்மை கொண்டவை. இவை மண்வளத்தை அதிகமாகப் பாதிக்கின்றன. பாலீத்தின் பைகளை பொறுக்கிக்கூட மறுசுழற்சிக்கு விடலாம் என்கிறார்கள். ஆனால், பாலீத்தின் சாஷேக்களைப் பொறுக்கி மறுசுழற்சிக்கு அனுப்பும் வாய்ப்பு மிக மிக கடினம். 19. 1920 வாட்டர் ஆக்ட் ( Water act ). ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட இந்தச் சட்டம் சொல்வெதல்லாம் ஊராட்சிக் கழிவுகள், வீட்டுக் கழிவுகள் எதையும் ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் கலக்கக்கூடாது என்பதுதான் . ஆனால், இது சட்டமாக மட்டுமே இருக்கிறது; நடை முறையில் இல்லை. சென்னையில் அப்படி கலந்துதான், கூவம், அடையாறு போன்ற ஆறுகளைச் சாக்கடையாக்கிவிட்டோம். இதனைத் தடுக்கவும் கழிவுகளைச் சரியான முறையில் மேலாண்மை செய்யவும்,  திட்டங்களும் சட்டங்களும் தேவை. மயிலாடுதுறை சத்தியாவனம் கால்வாயில்,  சரியாக சுத்திகரிக்கப்படாத ஊராட்சிக் கழிவுகள்  கலந்ததன் மூலம், அந்தக் கால்வாய் பாசனம் பெறும் 50-க்கும் மேறபட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த ஊர் மக்கள், சத்தியாவனம் கால்வாயை சின்னக் கூவம் என்றே அழைக்கிறார்கள். இது ஒரு சின்ன உதாரணம்தான். இதுபோல தமிழ்நாட்டில் அநேக உதாரணங்களைச் சொல்ல முடியும். 20. ஈக்வெடார் நாட்டில் தாய்மண் உரிமைச் சட்டம் என்று நிலப் பாதுகாப்பு சட்டம் ஒன்றை நிறைவேற்றியிருக்கிறார்கள். இயற்கை வளங்களுக்கு எதிரான எல்லாத் திட்டங்களையும் இந்தச் சட்டம் எதிர்க்கிறது. இயற்கை வளங்கள் சல்லிசாகச் சூறையாடப்படும் தமிழகத்தில்,  இந்தச் சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட வேண்டும். இயற்கை வளத்துக்கு எதிரான ஒரு திட்டத்துக்கு அரசாங்கம் அனுமதிக்கொடுத்தாலும், இந்தச் சட்டத்தின் மூலம் அந்தத் திட்டத்தை நிறுத்திவைக்க முடியும்.

மனித உரிமையைவிட, நிலம், இயற்கை வளப் பாதுகாப்புக்கு இது மிக முக்கியத்துவம் தருகிறது. எந்தவொரு தனிமனிதனும் இத்திட்டத்தின் மூலம் நிலம் இயற்கை வளங்களைப் பாதுக்காக்க நீதிமன்றத்தில் வழக்குத்  தொடுக்க முடியும்.  இந்தச் சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்ந்த 13 லத்தீன் அமெரிக்க நாடுகள், இதை அமல்படுத்தும் முயற்சியில் இருக்கின்றன. இதன் மூலம் நிலத்துக்கு எதிரான கார்ப்பரேட் கம்பெனிகளின் லாப வெறியைத் தடை செய்ய முடியும்.  

- கதிர்பாரதி

  • UK & Europe
  • United States
  • Meet Sadhguru
  • Sadhguru Radio
  • Sadhguru Quotes
  • Youth N Truth
  • Beginner's Programs
  • Free Yoga & Guided meditation
  • Inner Engineering
  • Isha Health Solutions
  • See all beginner programs
  • Advanced Programs
  • Bhava Spandana
  • Shoonya Meditation
  • Additional Programs
  • Sadhanapada
  • Sacred Walks
  • See all additional programs
  • Children's Programs
  • Become a Teacher
  • Monthly Events
  • Free Yoga Day
  • Pancha Bhuta Kriya
  • Online Satsang
  • Annual Events
  • Lunar/Hindu New Year
  • Guru Purnima
  • Mahashivratri
  • International Yoga Day
  • Mahalaya Amavasya
  • Special Events
  • Ishanga 7% - Partnership with Sadhguru
  • Yantra Ceremony With Sadhguru
  • Sadhguru Sannidhi Sangha
  • Pancha Bhuta Kriya Online With Sadhguru on Mahashivratri
  • Ecstasy of Enlightenment with Sadhguru
  • Sadhguru in Chennai

Main Centers

  • Isha Yoga Center
  • Sadhguru Sannidhi Bengaluru
  • Sadhguru Sannidhi, Chattarpur
  • Isha Institute of Inner-sciences
  • Isha Yoga Center LA, California, USA
  • Local Centers

International Centers

  • Consecrated Spaces
  • Adiyogi - The Source of Yoga
  • Adiyogi Alayam
  • Dhyanalinga
  • Linga Bhairavi
  • Spanda Hall
  • Theerthakunds
  • Adiyogi - The Abode of Yoga
  • Mahima Hall
  • Online Medical Consultation
  • In-Person Medical Consultation
  • Ayurvedic Therapies
  • Other Therapies
  • Residential Programs
  • Diabetes Management Program
  • Joint and Musculoskeletal Disorders Program
  • Sunetra Eye Care
  • Ayur Sampoorna
  • Ayur Rasayana Intensive
  • Ayur Rasayana
  • Pancha Karma
  • Yoga Chikitsa
  • Ayur Sanjeevini
  • Non-Residential Programs
  • Obesity Treatment Program
  • ADHD/Autism Clinic
  • Cancer Clinic
  • Conscious Planet

logo

உலக சுற்றுச்சூழல் தினம் - எப்படிக் கொண்டாடலாம்?! (World Environment Day in Tamil)

ஜூன் 5ல் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடும் நிலையில், சுற்றுச்சூழலைக் காப்பதற்கு நாம் செய்ய வேண்டியவை மற்றும் தவிர்க்க வேண்டியவை குறித்து ஒரு நினைவூட்டல் இங்கே!

உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

ஜூன் 5 - உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day in Tamil)

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெருகிவரும் மக்கள்தொகையாலும் தொழிற்சாலைக் கழிவுகள் மற்றும் வாகனப் புகையாலும் சுற்றுச்சூழல் வெகுவாக பாதிக்கப்படுவதை விஞ்ஞானிகள் அறிவுறுத்துவது ஒரு புறம் இருந்தாலும், ஒவ்வொரு ஆண்டும் கூடிவரும் கத்தரி வெயிலின் தாக்கமும், திடீரென்று பெய்யும் பேய் மழையும், அதனால் விளையும் பெருவெள்ளமும் இயற்கையில் ஏதோ ஒழுங்கற்ற தன்மை உருவாகி வருவதை சூசகமாக உணர்த்துகின்றன.

உலக வெப்பமயமாதல் எனும் பிரச்சனையால் பனிப்பாறைகள் உருகி கடல்மட்டம் உயரும் என்று சொல்லப்படுகிறது. நிலத்தடி நீர் பற்றாக்குறையால் தண்ணீர் பஞ்சமும் இந்தியாவின் பல இடங்களில் அதிகரிக்கத் துவங்கியுள்ளன. சுற்றுச்சூழலின் நலனை சீர்தூக்கிப் பார்த்து, இந்த பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு காண்பது குறித்து சிந்தித்து செயலாற்றுவதற்கான ஒரு நாளாகவே இந்த உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.

iceberg, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

சுற்றுச்சூழலைக் காக்க இந்த உலகிலுள்ள ஒவ்வொரு மனிதனும் முன்வர வேண்டும். இந்த உலகில் மனிதன் மட்டும்தான் உள்ளானா?! ஏன்... விலங்குகளும் பறவைகளும் கூட வாழ்கின்றன. அவைகள் ஏதும் செய்யக்கூடாதா என மனிதர்கள் கேட்பதற்கு நியாயமில்லை! ஏனெனில், மனித இனத்தை தவிர வேறெந்த உயிரினத்தாலும் சுற்றுச்சூழலுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை!

முன்னோர்களின் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு

நம் முன்னோர்கள் சுற்றுச்சூழல் குறித்த பெரும் அறிவையும் விழிப்புணர்வையும் கொண்டிருந்தனர் என்பதற்கு இலக்கியங்களில் கூட பல ஆதாரங்கள் உள்ளன. குறிப்பாக நிலத்தை ஐவகை திணைகளாக குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என பிரித்து, அங்கு வாழும் மக்களுக்கு ஏற்ப தொழில்கள், கலாச்சாரங்கள், கடவுள்கள் என வகுத்து முறையானதொரு வாழ்வை மேற்கொண்டனர். உதாரணமாக மலையும் மலை சார்ந்த இடம் குறிஞ்சி என்றால் மலையையே அவர்கள் கடவுளாகத்தான் பார்த்தார்கள். கடலும் கடல்சார்ந்த இடம் நெய்தல் என்றால் கடலை தேவதையாக வழிபட்டனர். நம்மைச் சுற்றியிருக்கும் நம் நிலத்தையும், நீரையும், காற்றையும் நம் வாழ்க்கையின் மிக உயரிய அங்கமாகக் கருதி வழிபட்டதால், அதனை மாசுபடுத்தாமல் பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலை இயல்பிலேயே இருந்தது.

குறைந்தபட்சம் 166 பயிரினங்கள் நமது நாட்டில் உண்டு. நெற்பயிரில் மட்டும் 50,000 இனங்கள் உண்டு. சோளத்தில் 5000 ரகம் உண்டு. மிளகுப் பயிரில் 500 வகையும் மாமரத்தில் 1000 வகையும் உண்டு. ஒவ்வொரு விலங்கினத்திலும் பலவகை உண்டு. வெள்ளாட்டில் 20 வகை, செம்மறியில் 42 வகை, எருமையில் 15 வகை, கால்நடையில் 30 வகை, கோழியில் 18 வகை, இப்படியாக சூழல் அமைப்புக்கு ஏற்ப மனித உதவியின்றியே இவை பரிணமித்துள்ளன. இந்த உயிரினங்களில் மனிதன் கோடியில் ஒரு துளி. இத்தனை உயிர்களுக்கும் இங்கு வாழ உரிமையுண்டு.

வணிக மனப்பான்மையின் அபாயம்

oxygen cylinder, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

மனிதனோ பூமி தனக்கு மட்டுமே சொந்தம் என எண்ணிக்கொள்கிறான்.

இந்த நிலை மாறவேண்டுமானால், முதலில், மனிதனின் மனநிலையில் ஒரு மாற்றமும் புரிதலும் தேவைப்படுகிறது. மற்ற உயிர்களைப் பற்றி சிந்திக்கும் தன்மையும் உணர்வும் மனிதனின் உள்நிலையில் அவசியமாகிறது.

இன்றைய மனிதனோ அனைத்தையும் வணிகப் பொருளாக பார்க்கத் துவங்கிவிட்டான். நிலமும், நீரும் தற்போது முற்றிலும் வணிகமயமாகிவிட்டன. நாம் சுவாசிக்கும் காற்றும் கூடிய விரைவில் கடைத்தெருக்களில் சிலிண்டர்களில் விற்பனைக்கு வந்துவிடுமோ என்ற அச்சம் இல்லாமல் இல்லை. இந்நிலைக்குக் காரணம் என்ன என்பதை சற்று ஆராய முற்பட்டோமானால், முதற்காரணமாக நம்முன்னே தெரிவது மக்கள்தொகை பெருக்கம்தான் . சுதந்திரம் பெறும் தருணத்தில் 33 கோடியாக இருந்த நம் எண்ணிக்கை, மூன்று மடங்கிற்கு மேல் தற்போது பெருகியுள்ளதைப் பார்க்கிறோம். இந்நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் நிலம், நீர், காற்று மட்டுமல்ல, ஆகாயமும் கூட நமக்கு போதாமல் போய்விடக்கூடிய சூழல் ஏற்பட்டுவிடும்.

காரணங்களும் தீர்வுகளும்

Population Explosion, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

மக்கள்தொகை அளவுக்கு அதிகமாகப் பெருகியதால் இயல்பாகவே தொழிற்சாலைகள் மற்றும் வாகனங்கள் பெருகின. இதன் கழிவுகள் அனைத்தும் காற்றுமண்டலத்திலும், நிலத்திலும், ஆறு, கடல்களிலும் கலந்து சுற்றுச்சூழலை மாசடையச் செய்துவருகின்றன. எனவே, நாம் சுற்றுச்சூழலைக் காப்பதற்கு முதன்மையாக செய்யவேண்டியது மக்கள்தொகை பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டியதும், இதுகுறித்த விழிப்புணர்வை மக்களிடத்தில் ஏற்படுத்த வேண்டியதுமே ஆகும்.

அடுத்த படிகளாக, நாம் ஒவ்வொருவரும் இந்த காற்று மண்டலத்தில் பதிக்கும் கார்பன் கால்தடங்களை குறைக்க வேண்டும். ஒவ்வொரு மனிதனும் குறிப்பிட்ட அளவு கார்பனை வளிமண்டலத்தில் கலக்கச் செய்கிறான். தற்போது உள்ள நிலவரப்படி கணக்கிட்டால், நாம் எடுத்துக்கொள்ளும் ஆக்ஸிஜனுக்கு ஈடுசெய்து நாம் விட்டுச் செல்லும் 'கார்பன்' கால் தடங்களைக் குறைக்கும் விதமாக ஒவ்வொருவரும் குறைந்தது 5 மரக்கன்றுகளாவது நடவேண்டும்.

சுற்றுச்சூழலில் ஆக்ஸிஜன் அதிகரிக்க…

Tree planting, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

பொதுவாக, ஒரு வளர்ச்சியடைந்த மரமானது, நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவையான 260 பவுன்ட் அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றது.

பொதுவாக நாம் மகிழ்வுந்து, இருசக்கர வாகனம் என ஆளுக்கொரு வாகனத்தில் பயணிக்கிறோம். 100 பேர் 100 வாகனங்களில் செல்வதற்கு பதிலாக அனைவரும் ஒரு பேருந்தில் பயணம் செய்தால் கூடுதலாக 99 வாகனங்கள் புகை கக்குவதைத் தடுக்க முடியும் அல்லவா?! அதேபோல் புகை கக்கும் வாகனங்களுக்கு பதிலாக மிதிவண்டியை கூடுமானவரை பயன்படுத்தலாம். இதனால் உடலும் ஆரோக்கியத்துடன் இருக்கும்.

காகிதப் பயன்பாட்டில் கவனம்

Old newspapers, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

செய்தித்தாள் ஒன்றை, 9 முறை மறுசுழற்சி செய்யமுடியும் என்று சொல்கிறார்கள். எனவே, படித்துவிட்டு செய்தித்தாளைக் கீழே வீசவேண்டாம். 1 மீட்டர் உயரத்துக்கு அடுக்கப்பட்டுள்ள செய்தித்தாள்களை மறுசுழற்சி செய்வதன் மூலம் 7 மீட்டர் உயரமுள்ள மரம் வெட்டப்படுவதைத் தவிர்க்கலாம் என சொல்லப்படுகிறது. எளிமையான வாழ்க்கை என்பது சுற்றுச்சூழலைக் காப்பதற்குத் துணைநிற்கும்.

மறுசுழற்சி, மறு பயன்பாடு என்ற மனப்போக்கை வளர்த்துக்கொள்வது அவசியமாகிறது. காடுகளை அழிப்பதில் பேப்பர்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. ஆகவே, பேப்பர்களைப் பயன்படுத்தும்போது நிதானமாகச் செயல்படுவது நல்லது. தட்டச்சு செய்யும்போது இரண்டு பக்கங்களிலும் செய்யலாம்.

இன்று எளிதாகக் கிடைக்கக்கூடிய உலோகம் அலுமினியம். சிகரெட் பாக்கெட்டில் இருக்கும் அலுமினியத் தாள்கள், பாட்டில் மூடிகள், மாத்திரைகள் இருக்கும் அலுமினிய அட்டைகள், பழைய பாத்திரங்கள் ஆகியவை மீண்டும் பயன்படும் புதிய பொருட்களாக மாற்றப்படலாம். இவற்றை சேமித்து வைத்து, சேகரிப்பவரிடம் கொடுக்கலாம்.

உலக சுற்றுச்சூழல் தினம் - மேற்கொள்ள வேண்டிய உறுதிகள்

சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கு நாம் செய்ய வேண்டியது என்னென்ன எனப் பார்த்தால், அதில் முக்கியமானது குறைந்தபட்சம் ஆளுக்கொரு மரம் நடுவது. அடுத்தபடியாக, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துவது. இயற்கை விவசாய முறைகளைக் கையாளுதல்; வீடுகளில் மழைநீர் சேகரிப்பு தொட்டிகளை அமைத்தல் போன்றவற்றை சொல்லலாம்.

தவிர்க்க வேண்டியதென்று பார்த்தால், அத்தியாவசிய தேவைக்குத் தவிர மற்ற நேரங்களில் மோட்டார் வாகனங்களைப் பயன்படுத்தாமல் இருப்பது. அதற்குப் பதிலாக மிதிவண்டிகளைப் பயன்படுத்தப் பழகினால், சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு உடல்நலமும் மேம்படும் வாய்ப்புள்ளது. வீட்டிலிருந்து புறப்படும் முன், மின்சாதன பொருட்களை அணைக்காமல் செல்லுதல் போன்ற சின்னச் சின்ன செயல்களையும் நாம் கவனித்து தவிர்க்கத் தேவையுள்ளது!

புகைப்பதை தவிர்ப்போம்…!

புகைபிடித்தலைத் தவிர்க்கலாம். அது புகைப்பவரின் உடல்நலத்திற்கு மட்டுமல்லாமல் உடனிருப்பவருக்கும் தீங்கை விளைவிக்கும். ஆண்டுதோறும் அமெரிக்காவில் புகை பிடிக்காத 4,000 பேர் புற்றுநோய் வந்து இறக்கிறார்கள் என்று சொல்லப்படுகிறது. கண்ணாடி, மண்ணோடு மக்க குறைந்தது 100 ஆண்டுகள் ஆகும். எனவே, கண்ணாடியை மறுபயன்பாட்டுக்கும், மறுசுழற்சிக்கும் அனுப்பவேண்டும். நெகிழி எனப்படும் பிளாஸ்டிக் என்பது மண்ணில் மக்கக்கூடியதே அல்ல. ப்ளாஸ்டிக் பைகளை பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்ப்பது சுற்றுச்சூழலுக்கு மிகவும் அவசியமானதாகிறது. பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களைக் கீழே வீசாமல் மறுபயன்பாட்டுக்கும், மறுசுழற்சிக்கும் அனுப்பலாம். பொருட்களை வாங்க கடைக்குச் செல்லும்போது, வீட்டில் இருந்தே பை எடுத்துச் செல்லலாம்.

பிளாஸ்டிக் எனும் பேரரக்கன்…

Plastic waste inside a bird, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

2018ம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தில் ஈஷா அறக்கட்டளையும், நதிகளை மீட்போம் இயக்கமும் ஐநா சுற்றுச்சூழல் அமைப்புடன் இணைந்து, ஒருமுறை மட்டுமே பயன்படுத்தி தூக்கியெறியும் பிளாஸ்டிக் பயன்பாட்டினை தடைசெய்வதற்கான முன்னெடுப்புகளை முன்னின்று நிகழ்த்தின.

பசிபிக் பெருங்கடல் பகுதியில் உள்ள மிட்வே அடோல் தேசிய வனவிலங்கு சரணாலயத்தில் கடந்த செப்டம்பர் 2009ல் இறந்த அல்பட்ரோஸ் வகை கடல்பறவை குஞ்சின் இரைப்பை பகுதி புகைப்பட கலைஞரால் படம்பிடிக்கப்பட்டது. அதில், அதன் தாய் பறவையால் பிளாஸ்டிக் கழிவுகள் அந்தக் குஞ்சுக்கு ஊட்டப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது.

முறையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு நாம் கொடுத்த விலை!

முறையற்ற பிளாஸ்டிக் பயன்பாட்டினால் நாம் நம் சுற்றுச்சூழலில் பலவிதமான பாதிப்பை உண்டாக்கிக் கொண்டுள்ளோம்... அவற்றில் சில இங்கே!

Plastic waste in Sea, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

60 முதல் 90% கடல் கழிவுகள் பலவகைப்பட்ட பிளாஸ்டிக் மூலப்பொருட்களால் சேர்கின்றன.

2015ல் உலக அளவிலான பிளாஸ்டிக் உற்பத்தியின் மதிப்பானது 900 எம்பயர் ஸ்டேட் கட்டிடங்களுக்கு இணையானது என கணக்கிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நம் கடல்களில் 51 ட்ரில்லியன் மைக்ரோ பிளாஸ்டிக் அங்கங்கள் சேர்ந்துள்ளன.

பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்கும் வழிகள்

avoid one time use plastic, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

நீங்கள் உண்மையிலேயே பிளாஸ்டிக் கழிவுகளை உற்பத்தி செய்யாமல் தவிர்க்க விரும்பினால், மீண்டும் மீண்டும் தண்ணீர் நிரப்பி பயன்படுத்தக்கூடிய தண்ணீர் பாட்டிலை எடுத்துச் செல்லுங்கள்!

குளிர்பானங்களோ அல்லது வேறு பிற பானங்களோ கடைக்காரரிடம் வாங்கி அருந்தும்போது, பிளாஸ்டிக் straw வாங்காமல் மறுத்துவிடுங்கள்!

பொருட்கள் வாங்க கடைத்தெருவிற்கு செல்லும்போது, நீங்கள் துணிப்பையை உடன் எடுத்துச் செல்லவும். ஒரு நபர் சராசரியாக 12 நிமிடங்கள் மட்டுமே ஒரு பிளாஸ்டிக் பையை உபயோகித்து பின் தூக்கி எறிகிறார். நீங்கள் அதுபோன்ற ஒரு நபராக இருக்க வேண்டாம்.

உணவுப் பதார்த்தங்களை கொண்டு செல்லும்போது, பதார்த்தங்களை எடுத்துச்செல்ல பாத்திரங்களைப் பயன்படுத்தலாம். பிளாஸ்டிக் கவர்களை புறந்தள்ளிவிட்டு, ஏன் நீங்கள் உங்கள் சொந்த பாத்திரங்களில் எடுத்துச் செல்லக்கூடாது?! இப்படிச் செய்வது உங்களுக்கு ஒருவேளை ஆரம்பகாலத்தில் அசௌகரியமாக தோன்றலாம். ஆனால், இதுவே பழக்கமாகிவிட்டால், பின்னர் அது எளிமையாகிவிடும்.

ஒரு நுகர்வோராக உங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுவதன் மூலம் நீங்கள் மகத்தான மாற்றத்தை உண்டாக்க முடியும்! பிளாஸ்டிக் நுண்பொருட்கள் அல்லது பிளாஸ்டிக் பேக்கேஜிங் இல்லாத பொருட்களைப் பார்த்து வாங்கவும். இது ஒரு எளிய படி என்றாலும், இதன்மூலம் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகும் ஒரு பெரிய தொடர் சங்கிலி துண்டிக்கப்படுகிறது.

மேற்கூறிய இந்த விஷயங்கள் நீங்கள் அன்றாட வாழ்க்கையில் கடைபிடிக்கக் கூடிய எளிமையான தீர்வுகளாகும்.

உங்களுடன் பணியாற்றும் சக ஊழியர்கள் மற்றும் நண்பர்களை அழைத்து, பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக அவர்கள் கையில் இருக்கும் துணிப்பைகளுடனோ அல்லது பிளாஸ்டிக் Strawக்கு பதிலாக உலோக உறிஞ்சிகள் அல்லது வேறு மறுசுழற்சி ஆகக்கூடிய பொருட்களுடனோ ஒரு செல்ஃபி எடுத்து பகிருமாறு கேட்டுக் கொள்ளவும். இதனை மேலும் ஐந்து நண்பர்களுக்கு Tag செய்து இதைப் பற்றி தெரிவிக்கச் சொல்லவும்.

இயற்கை விவசாயத்தின் அவசியம்

இரசாயன விவசாயத்தால் மண்வளம் பாதிக்கப்படுவதோடு சுற்றுச்சூழலும் மனித ஆரோக்கியமும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் இயற்கை விவசாய நுட்பத்தைக் கடைபிடிப்பதே இதற்கான தீர்வாக இருக்கும்.

இரசாயன உரங்களைத் தவிர்த்து, கால்நடை எரு, பஞ்சகாவியம் போன்ற இயற்கை ஊக்கிகளைப் பயன்படுத்தி இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்வதன்மூலம், மண்வளமும் மனித ஆரோக்கியமும் பாதிக்கப்படுவது தவிர்க்கப்படும்.

தற்போது ஈஷா விவசாய இயக்கம், இயற்கை வேளாண் வித்தகர் திரு.சுபாஷ் பாலேக்கர் அவர்களின் வழிகாட்டுதலில் தமிழகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை கொண்டு சேர்க்கின்றது. விவசாயிகளுக்கு இயற்கை விவசாயத்திற்கான பயிற்சியளித்து, இயற்கையின் பக்கம் திரும்பி வருகின்றனர்.

மலையை தூய்மை செய்யும் ஈஷா!

Velliangiri Mountain Cleaning, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

இயற்கை அன்னையின் தூய்மை மடியான மலைகளிலும் கூட, மனிதர்கள் குப்பைகளை நிறைக்கத்தான் செய்கிறார்கள். தென் கைலாயம் என்று போற்றப்படும் புனித வெள்ளியங்கிரி மலை அந்த சிவன் அமர்ந்த மலை மட்டுமல்ல, யானைகளின் காப்பகமாகவும், பல வன விலங்குகளின் இருப்பிடமுமாக இருக்கிறது. ஆனால் இந்தப் பசுமை நிறைந்த வெள்ளியங்கிரியும் பிளாஸ்டிக் குப்பைகளால் கொஞ்சம் காயம்பட்டே உள்ளது. இந்த மலைகளைத் தூய்மைப்படுத்தும் பணியில் ஈஷா யோக மையம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வருகிறது.

அந்த விதத்தில், ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச்சூழல் தினத்தில், ஈஷா தன்னார்வத் தொண்டர்களும், பல கல்லூரி மாணவர்களும், பொதுமக்களும் வெள்ளியங்கிரி மலையேறி பிளாஸ்டிக் குப்பைகளை அகற்றுகின்றனர்.

மரம் நடுவதன் அவசியம்!

Tree Planting, உலக சுற்றுச்சூழல் தினம், World Environment Day in Tamil

மரங்களின் வெளிமூச்சே மனிதனின் உள்மூச்சாகிறது. நமது பாதி நுரையீரலே மரங்களில்தான் தொங்கிக் கொண்டுள்ளன என சத்குரு அவர்கள் சொல்வதுண்டு.

இறந்தவர்களைப் புதைப்பது நல்லதா அல்லது எரிப்பது நல்லதா என்று ஒருமுறை சத்குரு அவர்களிடம் கேட்டபோது, “வாழும்போது எப்படி வாழ்கிறோம் என்பதை பொறுத்துதான், நம் நினைவிடங்களுக்கு மரியாதை என்பதை மறக்காதீர்கள். இறந்தவரைப் புதைத்து கான்க்ரீட் கல்லறை எழுப்பி, அந்த இடத்தைச் சொந்தம் கொண்டாடுவதால் என்ன லாபம்?

அதற்குப் பதிலாக அவரைப் புதைத்த இடத்தில் ஒரு மரம் நடுவது என்று முடிவு செய்யுங்கள். ஏக்கர் ஏக்கராக கான்க்ரீட் கல்லறைகள் எழுப்பி பூமியை மொட்டையடிப்பதைவிட, அங்கு ஏக்கர் கணக்கில் மரங்கள் இருந்தால் எப்படி இருக்கும் என்று யோசியுங்கள். மாண்டவர் எருவாகி, பச்சை இலைகளாகவும், வண்ணப் பூக்களாகவும் மீண்டும் உயிர் கொள்ளட்டுமே! பின்னால், வரும் சந்ததிகளுக்கு நிழலும், மழையும் கொடுக்கட்டுமே! மாண்டவரே மரமாக நிமிர்ந்து உயிருடன் ஓங்கி வளர்கிறார் என்று உணர்வுப்பூர்வமாக ஒரு திருப்தியும் கிடைக்கும் அல்லவா!” என்று சொல்லி சுற்றுச்சூழலுக்கு மரம் நடுதல் எவ்வளவு முக்கியம் என்பதை விளக்கினார்.

தமிழகத்தின் இந்த வறட்சி நிலையை மாற்றுவதற்காக ஈஷா துவங்கியுள்ள பசுமைக்கரங்கள் திட்டத்தின் பணி மகத்தானது. மரங்களின் தேவையை மக்கள் மனதில் பதிய வைத்தல், மக்களை மரம் நடவும் வளர்க்கவும் ஊக்கப்படுத்துதல், மரங்களைப் பாதுகாத்தல், தமிழ்நாட்டின் பசுமைக் குடையை 10% அதிகரித்தல் என பல்வேறு செயல்பாடுகளில் இறங்கி அதில் வெற்றியும் கண்டுவருகிறது ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம். தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்க 12.5 கோடி மரங்களை தமிழ்நாட்டில் நட்டு வளர்ப்பது என ஒரு மகத்தான நோக்கத்திற்காக தம்மை அர்ப்பணித்திருக்கிறது.

ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கான மரக்கன்றுகள் இலக்கு…

சுற்றுச்சூழலைக் காப்பது என்பது மரங்களின் உதவியில்லாமல் நடவாது. இன்னும் அழுத்தமாகச் சொல்வதென்றால் மரங்கள் இல்லாமல் மனிதனால் ஜீவிக்க முடியாது. மரங்களின் வெளிமூச்சே மனிதனின் உள்மூச்சாகிறது. "நமது நுரையீரலில் பாதி மரங்களில் தொங்கிக் கொண்டிருக்கிறது" என சத்குரு சொல்வதுண்டு.

தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் பல லட்சம் மரக்கன்றுகள் நடுவதை இலக்காகக் கொண்டு, செயலாற்றி வருகிறது ஈஷா பசுமைக்கரங்கள். 

உருவாக்கப்படும் வேளாண் காடுகள்

நிலத்தில் நீர் இல்லை; வேலைக்கு ஆட்கள் இல்லை; விற்ற பொருட்களுக்கு விலை இல்லை, இப்படி பல்வேறு காரணங்களால் விவசாயத்தைக் கைவிட நினைக்கும் விவசாயிகளுக்கு ஓர் அற்புத வாய்ப்பாக ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் வேளாண் காடுகளை உருவாக்கித் தருகின்றன. மரங்கள் நட்டு, வேளாண் காடுகள் அமைக்க விரும்புபவர்களுக்கு விலை மதிப்புள்ள தேக்கு, குமிழ், மகிழம், செஞ்சந்தனம், வேங்கை, கருமருது, காயா, வெண் தேக்கு, தான்றிக்காய், மஞ்சள்கடம்பை, மலைவேம்பு, பூவரசு, வாகை போன்ற வகைகளில் தரமான மரக்கன்றுகள் வழங்கப்படுகிறது. இதன் மூலம், நீடித்த, நிலைத்த வருவாய் பெறுவதற்கு ஏதுவாகிறது.

சுற்றுச்சூழலுக்கான இந்தியாவின் உயரிய விருதான "இந்திரா காந்தி பர்யவரன் புரஸ்கார்" விருதையும், தமிழக அரசு வழங்கும் சுற்றுச்சூழல் விருதினையும் ஈஷா பசுமைக்கரங்கள் திட்டம் பெற்றுள்ளது.

மேலும் தொடர்புக்கு: 80009 80009

[email protected]

Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News

நீர் பற்றிய கட்டுரை | Importance of Water in Tamil Katturai

Importance of Water in Tamil Katturai

நீர் வளம் பற்றிய கட்டுரை | Neer Patri Katturai

மனிதனுக்கு இயற்கையின் வரமாக கிடைத்தது நிலம், நீர், காற்று. இவை மூன்றும் இன்றி உலகம் இயங்காது என்பது உண்மை.  நீரானது மனிதருக்கு மட்டுமல்லாமல் உலகின் அனைத்து ஜீவராசிகளுக்கும் மிகவும் இன்றியமையாதது. நீர் இல்லை என்றால் உலகம் இல்லை என்பது உண்மை. இப்போது உள்ள காலகட்டத்தில் நீருக்காக அடுத்த உலக போரே ஏற்படலாம் என்று பேசுபவரும் உண்டு. காரணம், தண்ணீரின் தேவை அதிகரிக்கும் போது அவற்றை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் நாம் இன்று உள்ளோம். மனிதன் தன் வாழ்வில் “நீர்” என்பதை மிக முக்கிய அடிப்படை தேவையாக கருதியே வாழ்கின்றான். நீரின் முக்கியத்துவத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்து சொல்லும் கட்டாயத்தில் இன்றைய தலைமுறை உள்ளது. நீரின் முக்கியத்துவம் குறித்து கட்டுரை படிக்கலாம் வாங்க..

பொருளடக்கம்:

ஒரு மனிதன் உயிர் வாழ்வதற்கு மூல ஆதாரமாக இருப்பது தண்ணீர். மனிதன் உணவு இல்லாமல் கூட உயிர் வாழ முடியும், ஆனால் நீர் அருந்தாமல் ஒரு நாள் கூட இருக்க முடியாது. அந்த அளவிற்கு மனிதரின் வாழ்வில் நீரானது அவசியமாக இருக்கிறது. மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து பறவை, விலங்கின உயிரினங்களுக்கும் நீர் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது.

நீர்களின் பிறப்பிடமாக இருப்பது:

நீரானது ஹைட்ரஜன் மற்றும் (H2O) மூலக்கூற்றினால் உருவானது. பூமியில் நீரானது 71 சதவிகிதமாகவும், 28 சதவீகிதம் நிலத்தாலும் உருவாகியுள்ளது. நீரின் சதவிகிதம் தான் அதிகமாக உள்ளது. சமுத்திரங்கள், கடல்கள், ஏரிகள், ஆறுகள், குளங்கள், நீரூற்றுக்கள், தரைக்கீழ் நீர், பனிக்கட்டி, வளிமண்டலம் போன்றவைகளில் தான் பெரும்பாலும் நீர் தேக்கம் செய்யப்படுகிறது.

நீரின் முக்கியத்துவம்:

திருவள்ளுவர் நீர் இல்லையென்றால் இந்த உலகமே இல்லை என்கிறார். நீரின் முக்கியத்துவம் அந்த அளவிற்கு அமைந்துள்ளது. நீரானது உடல் சூட்டை தனிப்பதற்கும், உடலில் உள்ள அனைத்து உறுப்புகளுக்கும் ஊட்டச்சத்துக்களை கொண்டுபோய் சேர்க்கவும் பயன்படுகிறது.

உடலில் உள்ள தேவையில்லாத கழிவுகளை அகற்ற உதவியாக இருப்பது நீர் தான். உமிழ்நீர் போன்ற சுரப்பிகள் சுரப்பதற்கும் நீர் மட்டுமே ஆதாரமாக விளங்குகிறது. நீர் மனித மற்றும் உயிரினங்களுக்கு மட்டுமல்லாமல் விவசாய தொழிலுக்கு, தொழிற்சாலைகளுக்கு, உணவு உற்பத்தி போன்ற அனைத்து துறைகளுக்கும் முக்கியத்துவமாக இருக்கிறது.

நீரை பாதுகாக்க வழிமுறைகள்:

நம் முன்னோர்கள் அனைவரும் நீரினை அத்தனை வழிமுறைகளோடு பாதுகாத்து வந்தார்கள். நீர் வீணாகிவிட கூடாது என்று குளங்கள், ஏரி போன்று அமைத்து நீர் தேக்கம் கட்டி நீர் பாதுகாப்பிற்கு முக்கியத்துவம் அளித்தார்கள். நீர் தேக்கங்களை அழிக்க விடாமல் இன்றைய சந்ததியினர் நாம்தான் அவற்றை பாதுகாப்பாக மேற்கொள்ள வேண்டும்.

நீரை எடுக்கும் பெரும்பாலான தொழிற்சாலைகளை மூட வேண்டும். மழை நீர் சேகரிப்பு திட்டத்தை கடைப்பிடிக்க வேண்டும். காடுகளை அழிப்பதை தவிர்த்துவிட்டு மரம் வளர்ப்பதை மேற்கொள்ள வேண்டும்.

எல்லாவற்றிற்கும் நீர் முக்கியத்துவமாக இருப்பதால் நீரினை வீணடிக்காமல் பாதுகாப்பது நமது கடமையாகும். நீரின் முக்கியத்துவம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு செய்வதற்காக மார்ச் மாதம் 22-ஆம் தேதி உலக தண்ணீர் தினம் கொண்டாடப்படுகிறது. ஒவ்வொருவரும் நீர் இல்லையென்றால் உயிர் வாழ முடியாது என்று நினைத்தால் கண்டிப்பாக நீரினை பாதுகாப்போம்..!

மேலும் ஆன்மிகம், ஆரோக்கியம், விவசாயம் தமிழ் தொடர்பான பல பயனுள்ள தகவல்களை தெரிந்துகொள்ள பொதுநலம்.காம் தளத்தை பார்வையிடுங்கள்.

ஆசிரியர் தினம் பற்றிய சிறப்பான கட்டுரை

ஆசிரியர் தினம் பற்றிய சிறப்பான கட்டுரை

கிருஷ்ண ஜெயந்தி பற்றிய பேச்சு போட்டி..!

கிருஷ்ண ஜெயந்தி பற்றிய பேச்சு போட்டி..!

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை

சும்மா கிடைக்கவில்லை சுதந்திரம் கட்டுரை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் கட்டுரை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் கட்டுரை

பாரதியார் பற்றிய 10 வரிகள் – 10 Lines About Bharathiyar in Tamil

பாரதியார் பற்றிய 10 வரிகள் – 10 Lines About Bharathiyar in Tamil

ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை | Jawaharlal Nehru Katturai in Tamil | ஜவகர்லால் நேரு பற்றி கட்டுரை

ஜவஹர்லால் நேரு பற்றிய கட்டுரை | Jawaharlal Nehru Katturai in Tamil |  ஜவகர்லால் நேரு பற்றி கட்டுரை

Art Of Living Logo

Search form

  • பயிற்சியைக் கண்டு பிடியுங்கள்
  • மையத்தைக் கண்டு பிடியுங்கள்

சுற்றுச் சூழல் பாதுகாப்பு (Environment protection in tamil)

environmental safety essay in tamil

Indigenous Specie Protection Restoring homes to indigenous fauna – Australia

environmental safety essay in tamil

Environmental Care

ஆன்மீகத்தை அடி வேராகக் கொண்ட, வாழும் கலை நிறுவனம், நமது பூமியினைப் பற்றி ஆயிரக் கணக்கான மக்களுக்கு மரியாதையை ஏற்படுத்தியுள்ளது. பூமியானது பாறை, மணல், நீர் இவற்றினால் ஆனதாக இருந்தாலும் அதற்கு, நமது கவனம் மற்றும் கவனிப்புக்கு பதிலளிக்கும் வகையில் துடிப்பாக வாழும் அடையாளத்தை ஆன்மீகம் அளித்திருக்கின்றது.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களின் தொலை நோக்கில் உந்தப் பட்டு, தன்னார்வத் தொண்டர்கள் குழுக்களாக உலகெங்கும் இருந்து, பல சுற்றுச் சூழல் திட்டங்களை முன்னிருத்தி யிருக்கின்றனர். அவை : பசுமை இயக்கம் மூலம் பெரிய அளவிலான மரம் நடுதல் , நீர் சேகரித்தல், மாசுபட்ட நதிகளைத் தூய்மைப் படுத்துதல் ஏழை விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும், செலவே இல்லாத வேதியல் பொருட்களற்ற, பொருளாதரத்தை மேம்படுத்தும் மற்றும் உயிர்பொருள் நிறைந்த வேளாண்மை, ஆகியவை ஆகும்.

மேலும் வாழும்கலை நிறுவனம் இயற்கையைப் பாதுகாப்பின் அவசியத்தைக் கண்டுணர்ந்து, வீட்டிலும் பள்ளியிலும் அப்பண்புகள் இளைஞர் மனங்களில் விதைக்கப் பட வேண்டும் என்று வலியுறுத்துகின்றது. "ஆழமான வேர்கள் அகலமான பார்வை" என்று அழைக்கப் படும் விழிப்புணர்வு திட்டங்கள் இந்த நீண்ட நாள் பணித்திட்டங்களின் முக்கியமான அங்கங்களாக விளங்குகின்றன.

தமிழ்த்துகள்

  • Tamil Grammar
  • 10th Questions
  • Teaching Aids

தலைப்பு கொடுத்து இங்கே தேடவும் (சுருக்கமாக)

' height=

Thursday, October 06, 2022

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் விழிப்புணர்வும் கட்டுரை environmental protection and awareness tamil essay.

சுற்றுச்சூழல் பாதுகாப்பும் விழிப்புணர்வும்

முன்னுரை

"மண்டிணிந்த நிலனும்

நிலனேந்திய விசும்பும்

விசும்பு தைவரு வளியும்

தீமுரணிய நீரும் என்றாங்கு

ஐம்பெரும் பூதத் தியற்கை" -என்கிறது புறநானூறு. ' மனிதன் ' வாழ்வதற்காக மட்டுமே என்று தவறாக எண்ணிக் கொண்டிருக்கும் நாம் இந்தப் புனித பூமி பல்லாயிரக்கணக்கான உயிரினத் தொகுதிகளின் வாழிடம் என்பதை மறந்து போய்விட்டோம்.

பூமியின் இயற்கைச் சூழலின் நிலைப்பாட்டில் இருந்து பண்பாட்டோடு வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். அவர்கள் படைத்த இலக்கியங்களும் இயற்கையோடு இணைந்த வாழ்வையே பேசியது. சுயநலம் எனும் மேகம் மறைக்கப் பொதுநலம் கேள்விக்குறியானது. திக்கெட்டும் விட்டெறிந்த கல்லாய் பூமி குப்பை மேடானது. உயிரின் இசையை இறை உணர்வோடு மீட்டிக் கொண்டிருந்த பூமித்தாய் , இப்போது மூச்சு முட்டிக் கிடக்கிறாள். இனியும் பொறுத்துப் பயனில்லை என்று அவ்வப்போது பொங்குவதும் அடங்குவதுமாய்த் தன்னைச் சரி செய்ய முயற்சிக்கிறாள். வருங்காலத் தலைமுறையின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி விட்ட நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பும் விழிப்புணர்வும் ' பற்றிப் பேசுவதே இக்கட்டுரையின் சாரம்...

சுற்றுச்சூழல் பற்றிய இலக்கிய வரிகள்

பெருவெடிப்பில் உருவான உயிர்க்கோளம் போனால் போகட்டும் ' என விட்டு வைத்தது நான்கில் ஒரு பாகம். ஆம்! அதில் முந்தி முளைத்த தாவரங்கள் விலங்குகள் பறவைகளைத் தன் மூச்சுக்காற்றால் அறிந்து , அன்பு செய்து வாழ்ந்தவர்கள் நம் முன்னோர். "ஒத்தது அறிவான் உயிர் வாழ்வான்" , என்கிறது உலகப் பொதுமறை. தாவரங்களின் நெருக்கத்தை   "காய் மாண்ட தெங்கின் பழம் வீழக் கமுகின் நெற்றிப் பூமாண்ட தீந்தேன் தொடைகீறி வருக்கை போழ்ந்து தேமாங்கனி சிதறி வாழைப்பழங்கள் சிந்தும்

ஏமாங்கதமென்னும் இசையால் திசைபோயதுண்டே” , என்கிறது ஐம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவக சிந்தாமணி.

"அம்புலியைக் கவளம் என்று தும்பி வழிமறிக்கும்" என்கிறார் திரிகூடராசப்பக் கவிராயர்

"வானரங்கள் கனி கொடுத்து மந்தியோடு கொஞ்சும்

மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்" , என்ற குற்றாலக் குறவஞ்சி வரிகள் குறிஞ்சி நிலத்தின் அழகை நம் கண்முன்னே காட்டுகின்றன.

சுய நலத்தால் மாசுபடும் சுற்றுச்சூழல்

"வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி" என்ற மாணிக்கவாசகரின் வரிகள் இயற்கையே இறைவன் ' என்று கூறுகிறது. சுண்ணம் கலக்காத வண்ணக் கோலம் புனையும் வானம் , இன்று புகை பூசிக் கறுத்திருக்கிறது. தொழிற்சாலைகளின் விண்ணை முட்டும் புகை போக்கிகள் வளிமண்டலத்தில் கரிவளியைக் கலக்கின்றன. ஓயாது ஓடிக்கொண்டிருக்கும் மோட்டார் வண்டிகளும் தன் பங்குக்குப் புகை உமிழ்கின்றன.

"உறுபசியும் ஓவாப்பிணியும் செறுபகையும்

சேராது இயல்வது நாடு" என்ற வள்ளுவரின் இலக்கணம் , உலகில் எந்த நாட்டுக்கும் பொருத்தம் இல்லாமல் போய்விட்டது. சாயப்பட்டறைக் கழிவுகள் , தோல் தொழிற்சாலைக் கழிவுகள் ஆறுகளில் கலப்பதால் அதில் வாழும் உயிரினத் தொகுதிகள் மடிகின்றன. நிலத்தடி நீர் உவர் நீர் ஆகிவிட்டது. புனித நதிகள் "என்று போற்றப்படும் கங்கையும் யமுனையும் சாக்கடை நீரால் அசுத்தம் அடைந்து கொண்டு வருகின்றன. வசதியாய் இருக்கும் என நம் அறிவியல் கொடுத்த பாலித்தீன் பைகள் நிலத்தை மலடாக்குகின்றன. கால்நடைகள் அவற்றை உண்டு கொத்துக்கொத்தாய் மடிகின்றன. மக்குவதற்கு 400 ஆண்டுகள் பாலிதீனுக்குத் தேவைப்படும் என்பதை அறியாத மனிதர்கள் அரசின் எச்சரிக்கைகளையும் மீறி அதனைப் பயன்படுத்தித் தூக்கி எறிந்து வருகிறார்கள்.

நெகிழி படுத்தும் பாடு

கால்வாய் அடைப்பு கழிவுநீர்த் தேக்கம் , நிலத்தடி நீர்மட்டம் குறைவு என நேரடியான விளைவுகளை பாலித்தீன் ஏற்படுத்துகிறது இதனை எரிப்பதால் உண்டாகும் "டயாக்சின்" வாயு ஒவ்வாமை தோல்புற்று , குடல் புண் , செரிமானக் கோளாறு மற்றும் குழந்தைப் பேறின்மை போன்றவற்றை மறைமுகமாக ஏற்படுத்துகிறது. காசைக் கரியாக்கும் பட்டாசு வெடிகள் வளிமண்டலத்தைத் தூசு மண்டலமாக்குவதோடு , அதில் கலக்கும் வேதிப்பொருள்களான கார்பன். ஆர்சனிக் கந்தகம் போன்ற வாயுக்கள் ஆஸ்துமா மற்றும் நுரையீரல் புற்று நோய்களுக்குக் காரணமாகின்றன. "மேல் வரவறியாதோன் தற்காத்தல் பொய்" என்று முதுமொழிக்காஞ்சி என்றோ எச்சரித்து விட்டது வந்தபின் காப்பது மடமை ' அன்றோ ? வருமுன் காக்கத் தவறிவிட்டால் ஆறாம் அறிவு மனிதர்களாகிய நமக்கு இருந்து என்ன பயன்.

விழித்துக் கொண்டோரெல்லாம் பிழைத்துக் கொண்டார்

வெள்ளையர் ஆட்சியிலேயே ' மழைக் காடுகள் என்று சொல்லப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைக் காடுகள் ஐரோப்பியக் காலனி ஆதிக்கவாதிகளால் அழிக்கப் பட்டன.

"வான் பொய்ப்பினும் தான் பொய்யாத வையை எனும் பொய்யாக் குலக்கொடி"

இன்று வறண்டு கிடக்கிறாள். சுற்றுச்சூழலைக் காக்க 1972 ல் ஸ்டாக் ஹோமிலும் 1982 ல் நைரோபி , ரியோ டி ஜெனிரோ விலும் 2002 இல் ஜோகன்ஸ் பர்க்கிலும் மாநாடுகள் நடத்தப்பட்டன. உலக வெப்பமயமாதல் , பசுமை இல்ல விளைவு, அமில மழை போன்ற கேடுகள் ஏற்படாமல் தடுக்க தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன .

ஜூன் 5 உலகச் சுற்றுச்சூழல் நாளாக அறிவிக்கப்பட்டது. செப்டம்பர் 16 ' ஓசோன் தினமாகவும் ஜூலை 28 இயற்கைப் பாதுகாப்புத் தினமாகவும் மார்ச் 22 உலக நீர் தினமாகவும் நாம் கொண்டாடி வருகிறோம்.

அறம் பொருள் , இன்பம் வீடு வகுத்து குறிஞ்சி , முல்லை , மருதம், நெய்தல் , பாலை பிரித்து இயற்கை வாழ்வை வாழ்ந்த அன்றைய நாள் மீண்டும் வந்திடாதா ? என்று ஏங்கிக் கிடக்கின்றோம்.

குளோரோ புளோரோ கார்பனால் வளிமண்டலத்தில் ஓசோன் ஓட்டை , அகச்சிவப்புக் கதிர் வீச்சால் புவி வெப்பமயமாதல் ஏற்படுவதைச் சுட்டிக்காட்டி அதன் பயன்பாட்டைக் குறைக்க , உலகெங்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. வணிகப் பயிர்கள் விளையும் எஸ்டேட்டுகளாக மாறிவிட்ட குறிஞ்சியும் , வரைபடத்தில் கிட்டத்தட்ட காணாமலேயே போய்விட்ட முல்லை நிலமும் , வீட்டடி மனைகளாய் மாறிவிட்ட மருத நிலமும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளில் சிக்கிக் கொண்டு சின்னாபின்னமாய் ஆகிவிட்ட நெய்தல் நிலமும் மீட்டெடுக்கப்பட வேண்டும்.

"நிழல் நீரும் இன்னாத இன்னா தமர் நீரும் இன்னா ஆம் இன்னாசெயின்"

என்ற குறளின் வழி நின்று , குற்றம் விளைவிப்போர் நம் உறவினரே ஆயினும் அவர்களைக் கூண்டில் ஏற்றிச் சுற்றுச்சூழல் காக்க நாம் சூளுரைக்க வேண்டும்.

இன்றைய இளைஞர்களின் பங்கு

"காக்கை குருவி எங்கள் ஜாதி நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்

நோக்கும் திசையெல்லாம் நாமன்றி வேறில்லை

நோக்க நோக்கக் களியாட்டம்" - என்று ஆனந்தக் கூத்தாடினான் பாரதி அன்று..

"திறந்தவெளிக் கழிப்பிடங்கள் ; அவை , தொற்று நோயின் இருப்பிடங்கள் , என அறிந்து பொது சுகாதார வளாகத்தைப் பயன்படுத்த வேண்டும். மின்காந்த அலைகளால் வலசைப் பறவைகளின் பாதைக்கு ஊறு விளையாத வண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும். உலகத்தை உள்ளங்கையில் கொண்டு வரும் திறன் பேசிகள் , கணினிகள் பயன்படுத்தப்பட்ட பின் எலக்ட்ரானிக் குப்பைகளாக மாறி சுற்றுச்சூழலைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஆறுகளின் மணல் பரப்பை அள்ளினால் விவசாயத்தின் தாய்மடியாம் ' நிலத்தடி நீர் ' குறையும் என்பதை மனதில் கொண்டு , மாற்று வழி காண வேண்டும். வனவிலங்கு வர்த்தகத்தை என்ன விலை கொடுத்தேனும் தடுத்தாக வேண்டும். காற்றாலை , சூரிய மின்சாரம் , கடல் அலை மின்சார உற்பத்தி மூலம் நிலக்கரி , பெட்ரோலியப் பயன்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உலக மாசு நகரப் பட்டியலில் முதல் 20 இடங்களில் 15 நகரங்கள் இந்தியாவிலுள்ள என்ற இழிநிலை மாற்ற வேண்டும். முகநூல் , கீச்சகம் , புலனம் இவற்றை சுய விளம்பரத்திற்கு மட்டுமே பயன்படுத்தாமல் சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்கும் பயன்படுத்த வேண்டும்.

"ஆடு கோடாகி அதர் இடை நின்றதும் கால் கொண்ட கண்ணே களிறணைக்கும் கந்தாகும்”- என்ற நாலடியார் கூற்றை உணர்ந்து , இன்றைய சிறு செடிகள் நாளைய மரமாக வளர வழி செய்ய வேண்டும். நாட்டில் தண்ணீர்த் தட்டுப்பாடு இல்லாமல் இருக்க பெரிய குளத்தைத் தோண்ட வேண்டும். தளிர் விட்டு வளரக்கூடிய மரக்கிளைகளை நட்டு , தண்ணீர் ஊற்றி வளர்க்க வேண்டும். மக்கள் நடக்க முள் இல்லாத பாதைகளை மேடு பள்ளங்கள் இல்லாமல் செப்பனிட்டு வைக்க வேண்டும் தரிசு நிலங்களைப் பக்குவப்படுத்தி விளைநிலங்களாக மாற்ற வேண்டும். சுற்றிலும் கரை கட்டப்பட்டுள்ள கிணறுகளை வெட்ட வேண்டும். இந்த ஐந்து அறப்பணிகளையும் எவன் செய்கிறானோ அவனே ' சொர்க்கம் ' சென்றடைவான் என்கிறது பின்வரும் சிறுபஞ்சமூலப் பாடல்

குளம் தொட்டுக் கோடு பதித்து வழி சீத்து

உளம் தொட்டு உழுவயல் ஆக்கி வளம் தொட்டுப்

பாகு படும் கிணற்றோடு என்று இவ்வைம்பாற் படுத்தான்

ஏகும் சுவர்க்கத்து இனிது"

இன்றைய இளைஞர்கள் நாளைய பாரதத்தின் தூண்கள். அவர்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை ' என்பதை உணர்ந்தால் இனி எந்த ஆபத்தும் இல்லை.

அரசின் திட்டங்களும் சுற்றுச்சூழல் காக்கும் சட்டங்களும்

நீரை ' காயகல்பம் ' என்றவர் நம் அறிவியல் அறிஞர் சர் சி.வி.ராமன். இன்னோர் உலகப்போர் நடைபெறும் என்றால் அது தண்ணீருக்காகத் தான் என்று உலக நாடுகள் அனைத்தும் விழிப்புணர்வு பெற்று விட்டன . காடுறை உலகம் , தீம்புனல் உலகம் , மைவரை உலகம். பெருமணல் உலகம் என்று தொல்காப்பியர் காலத்திலேயே பாகுபாடுகளை வகுத்து அதற்கு ஏற்பப் பயிரிட்டு இயற்கை காத்தவர்கள் நம் முன்னோர்.

மரங்களுக்கும் உணர்வு உண்டு ' என்று எண்ணிப் போற்றியவர்கள் நம் முன்னோர். மங்கை ஒருத்தி புன்னை மரத்தைத் தன் உடன் பிறந்தாளாக எண்ணி அவ்விடத்தில் தான் தன் காதலனைச் சந்திக்க மறுத்ததாக ' நற்றிணை பாடல் ஒன்று கூறுகிறது அப்படித் தடம் பதித்து வாழ்ந்த கூட்டம். இன்று தடம் மாறாமல் இருக்கவே சட்ட திட்டங்கள் தேவைப்படுகின்றன. 1996 இல் ' சுற்றுச்சூழல் பாதுகாப்புத்துறை ' உருவாக்கப்பட்டது.   2022 க்குள் திறந்தவெளி மலம் கழித்தலை ஒழிக்க ' நிர்மல் பாரத் அபியான் ' செயல்பட்டு வருகிறது. 2005 முதல் தூய்மை பேணும் கிராமங்களுக்கு ' நிர்மல் கிராம புரஷ்கார் ' விருது வழங்கப்பட்டு வருகிறது.

2014 அக்டோபர் இரண்டில் தொடங்கப்பட்ட ஸ்வச் பாரத் அபியான் அதாவது ' தூய்மை இந்தியா திட்டம் ' 441 நகரங்கள் மற்றும் பேரூர்களில் நவீன கழிப்பறைகள் செயல்படுவதை உறுதி செய்துள்ளது. ' தூய்மை இந்தியா செஸ் வரி ' மூலம் திரட்டப்பட்ட நிதியைக் கொண்டு 266 மாவட்டங்களில் உள்ள 3 . 4 லட்சம் கிராமங்களில் திறந்த வெளிக் கழிப்பிடங்கள் ஒழிக்கப்பட்டு சுகாதார வளாகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் தூய்மை நகரங்கள் வரிசையில் இந்தூர் , சூரத் , விஜயவாடா முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. இதில் சென்னைக்கு 43 வது இடமே கிடைத்துள்ளது நாட்டின் சுத்தமான மாநிலங்கள் வரிசையில் சத்தீஸ்கர் மாநிலம் முதலிடம் பிடித்துள்ளது.

வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் 1972 ல் இயற்றப்பட்டது. புலிகளின் எண்ணிக்கையை கொண்டு காட்டின் வளம் கணிக்கப்படும் இதற்காக எடுத்த சிறப்பு முயற்சிகளால் 2010 ல் 1700 புலிகள் மட்டுமே இருந்த நிலை மாறி 2014 இல் 30 விழுக்காடு அதிகரித்து 226 புலிகள் என்று எண்ணிக்கை உயர்ந்துள்ளது ஐநா அங்கீகாரம் செய்யும் 195 நாடுகளும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க உறுதி கொண்டுள்ளன.

மீத்தேன் திட்டம் அணு உலைகள் நியூட்ரினோ கார்பன் ஹைட்ரோ திட்டங்கள் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் முழு அனுமதி பெற்ற பிறகு செயல்படுத்தப்படுகின்றன. 18 மைக்ரான் அளவுக்குக் குறைவான பாலித்தீன் பைகள் உற்பத்தி மற்றும் பயன்பாட்டுக்குத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. உஜாலா திட்டத்தின் மூலம் உன்னத ஜோதி எனப்படும் எல் இ டி பல்புகள் 5 - 1 - 2015 முதல் வழங்கப்பட்டு வந்தன.

7 - 5 - 2018 ன் படி 29 . 83 கோடி பல்புகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆண்டுக்கு 38,742 கிலோ வாட் மின்சாரம் சேமிக்கப்பட்டுள்ளது. திட மற்றும் திரவக்கழிவு மேலாண்மைத் திட்டத்தில் 70 : 30 என்ற விகிதத்தில் மத்திய மாநில அரசுகள் எருக்குழி அமைத்தல் , மண்வாறுகால் அமைத்தல் , உறிஞ்சு குழி அமைத்தல் மற்றும் பார்த்தீனியச் செடி ஒழிப்பு இவற்றுக்காகப் பெரும் தொகையினைச் செலவிட்டு உள்ளன.

அரசு முயற்சி

120 டெசிபலுக்கு மேல் ஒலி அளவு இருந்தால் அது ஒலி மாசாக அறிவிக்கப்பட்டு மீறுவோரைத் தண்டிக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது. இன்றைய நவீன காலத்தில் ' ஒளி மாசும் ஏற்படுகிறது இதனால் இரவு பகல் குழப்பம் ஏற்பட்டு விலங்கினங்கள் மற்றும் பறவை இனங்களின் வழித்தடங்கள் பாதிக்கப்படுதல் , இனப்பெருக்கத் தடை இவைகளால் இயற்கை வாழ்வு பாதிக்கப்படுவதாக ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

பன்னாட்டு நிறுவனங்களின் தொழிற்சாலைகளுக்குத் தண்ணீர் உறிஞ்சும் அளவைக் கட்டுப்படுத்தும் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. மேலும் பல்வேறு சட்டங்கள் மூலம் சுற்றுச்சூழலை மீட்டெடுக்கவும் , பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அரசு முழு முயற்சி மேற்கொண்டு வருகிறது.

முடிவுரை

வரப்புயர நீருயரும்

நீருயர நெல்லுயரும்

நெல்லுயரக் குடி உயரும்

குடி உயரக் கோன் உயரும்

என்கிறார் ஔவையார். கடந்த 30 ஆண்டுகளில் நன்செய் நிலங்களில் 20 விழுக்காடு வீட்டுமனைகள் ஆகிவிட்டன என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. ஆறுகளின் வழித்தடங்களை மறித்துக் கட்டிய வீடுகள் பெருக்கெடுத்து ஓடும் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்படும் நிலை உருவாகிவிட்டது. ஒரு கை தட்டினால் ஓசை வராது, தனி மரம் தோப்பாகாது, அரசுடன் பொதுமக்களும் இணைந்தால் மட்டுமே சுற்றுச்சூழலைப் பாதுகாக்க முடியும்.

மூன்று விழுக்காடு மட்டுமே உள்ள உலகின் குடிநீரைப் பங்கு போடுவதில் நமக்குள் போட்டி வந்து விடக்கூடாது வற்றும் வளங்களுக்கு மாற்றுவளம் காண்பதும் வற்றா வளங்களை முழுமையாகப் பயன்படுத்துவதும் எதிர்காலத் தலைமுறை காக்க நாம் அவசியம் செய்தாக வேண்டும். ஆழிப்பேரலை தடுக்க அன்றே நம் முன்னோர் தாழை , புன்னை , ஞாழல் மற்றும் பனைமரக் கூட்டங்களைக் ' காணல் ' என்ற பெயரில் சோலைகளாக வளர்த்துப் பேரலைகளைத் தடுத்திருக்கிறார்கள்.

"எவ்வழி நல்லவர் ஆடவர்

அவ்வழி நல்லை வாழிய நலனே"- என்ற ஒளவையின் பொன் மொழியை மறந்துவிடக்கூடாது ஏனென்றால் ,

உண்ணக் கனி -ஒதுங்க நிழல்

உடலுக்கு மருந்து -உணர்வுக்கு விருந்து

அடையக் குடில் அடைக்கக் கதவு

அழகு வேலி -தாளிக்க எண்ணெய்

எழுதக் காகிதம் -எரிக்க விறகு

மரம்தான் மரம்தான் எல்லாம் மரம்தான்

மறந்தான் மறந்தான் மனிதன் மறந்தான்" என்கின்றன கவிஞர் வைரமுத்துவின் வரிகள். வாருங்கள்! இளைஞர்களே. இனி ஒரு விதி செய்வோம்! அதை எந்நாளும் காப்போம்!

தமிழ்த்துகள்

' border=

Blog Archive

  • ►  August (134)
  • ►  July (116)
  • ►  June (101)
  • ►  May (82)
  • ►  April (101)
  • ►  March (105)
  • ►  February (105)
  • ►  January (162)
  • ►  December (144)
  • ►  November (145)
  • ►  October (127)
  • ►  September (127)
  • ►  August (180)
  • ►  July (109)
  • ►  June (77)
  • ►  May (17)
  • ►  April (69)
  • ►  March (96)
  • ►  February (155)
  • ►  January (169)
  • ►  December (148)
  • ►  November (155)
  • எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 6 ...
  • ஏழாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பருவம் 2 ...
  • ஆறாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பருவம் 2 ...
  • 10ஆம் வகுப்பு தமிழ் 2ஆம் இடைப்பருவத்தேர்வு மாதிரி ...
  • பத்தாம் வகுப்பு தமிழ் இரண்டாம் இடைப் பருவத் தேர்வு...
  • ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 2 தமிழர் பெருவிழ...
  • ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 2 வாழ்விக்கும் க...
  • எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6 கொங்கு நாட்டு வணிகம் ...
  • வகுப்பு 7 பருவம் 2 தமிழ் பலவுள் தெரிக வினாடி வினா ...
  • வகுப்பு 6 தமிழ் பலவுள் தெரிக வினாடி வினா பருவம் 2 ...
  • இரண்டாம் இடைப் பருவத் தேர்வு 6-10 பாடத்திட்டம் 202...
  • ஆழ்கடலின் அடியில் ஏழாம் வகுப்பு விரிவானம் வினா விட...
  • ஆழ்கடலின் அடியில் ஏழாம்வகுப்பு விரிவானம் வினாவிடை ...
  • பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் கையேடு pdf 1...
  • ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 2 கண்மணியே கண்ணு...
  • ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 2 ஆசாரக்கோவை மனவ...
  • ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 2 அழியாச் செல்வம...
  • ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 2 இன்பத் தமிழ்க்...
  • எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6 மழைச் சோறு மனவரைபடம் ...
  • எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 6 வளம் பெருகுக மனவரைபடம...
  • உலக சிக்கன நாள் சிறுசேமிப்பும் நாட்டின் வளர்ச்சியு...
  • தீப ஒளி திருநாள் தீபாவளி கவிதை DIWALI POEM DEEPAVA...
  • பாதுகாப்பான தீபாவளி தமிழ் விழிப்புணர்வுக் கட்டுரை ...
  • தீபாவளிப் பண்டிகை தமிழ்க் கட்டுரை தீபாவளி கொண்டாடக...
  • பாதுகாப்பான தீபாவளி விழிப்புணர்வு உரை SAFETY DIWAL...
  • தீபாவளி உருவான வரலாறு தமிழ்ப் பேச்சு கட்டுரை TAMIL...
  • ஏர், கலப்பை பாகங்கள் பெயர்கள் AER, KALAPPAI NAME O...
  • எட்டாம் வகுப்பு தமிழ் பலவுள் தெரிக வினாடி வினா இயல...
  • பத்தாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 10th m...
  • ஒன்பதாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 9th m...
  • எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு 8th mo...
  • எட்டாம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 5 ...
  • எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 தொகைநிலை, தொகாநிலைத் ...
  • எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 தமிழர் இசைக்கருவிகள் ...
  • ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 1 இலக்கிய வகைச் ...
  • ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 1 ஆழ்கடலின் அடிய...
  • ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 1 இன எழுத்துகள் ...
  • ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 1 நூலகம் நோக்கி ...
  • தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு தஞ்சாவூர் மாதி...
  • தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு தர்மபுரி மாதிர...
  • குழந்தைத் திருமணத் தடுப்புச் சட்டம் தமிழ்க் கட்டுர...
  • 7ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு பருவம் 2 இ...
  • 8ஆம் வகுப்பு தமிழ் மாதிரி பாடக்குறிப்பு இயல் 5 நாட...
  • எட்டாம் வகுப்பு தமிழ் இயல் 5 நாட்டுப்புறக் கைவினைக...
  • ஏழாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 1 தமிழரின் கப்பற...
  • ஆறாம் வகுப்பு தமிழ் பருவம் 2 இயல் 1 கல்விக்கண் திற...
  • அண்ணல் காந்தி கனவு கண்ட ஒற்றுமை இந்தியா தமிழ்க் கட...
  • THE RED BALLOON CHILDREN MOVIE DOWNLOAD LINK த ரெட...
  • மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வகுப்பு 8 model notes o...
  • மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வகுப்பு 9 model notes o...
  • மாதிரி பாடக்குறிப்பு தமிழ் வகுப்பு 10 model notes ...
  • பத்தாம் வகுப்பு தமிழ் மங்கையராய்ப் பிறப்பதற்கே pow...
  • பத்தாம் வகுப்பு தமிழ் மெய்க்கீர்த்தி powerpoint pd...
  • பத்தாம் வகுப்பு தமிழ் சிற்றகல் ஒளி powerpoint pdf ...
  • பத்தாம் வகுப்பு தமிழ் மெல்லக் கற்போர் தேர்ச்சிக்கா...
  • 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் EM காலாண்டு வினாத்தாள...
  • 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் EM காலாண்டு வினாத்தாள்...
  • 10ஆம் வகுப்பு சமூக அறிவியல் TM காலாண்டு வினாத்தாள...
  • 9ஆம் வகுப்பு சமூக அறிவியல் TM காலாண்டு வினாத்தாள்...
  • 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் TM காலாண்டு வினாத்தாள்...
  • 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் TM காலாண்டு வினாத்தாள்...
  • 6ஆம் வகுப்பு சமூக அறிவியல் EM காலாண்டு வினாத்தாள்...
  • 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் EM காலாண்டு வினாத்தாள்...
  • 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் EM காலாண்டு வினாத்தாள்...
  • மனித, வன உயிரினங்களுக்கு இடையிலான சகவாழ்வு தமிழ்க்...
  • 12ஆம் வகுப்பு இயற்பியல் TM காலாண்டு வினாத்தாள் வி...
  • 11ஆம் வகுப்பு இயற்பியல் TM காலாண்டு வினாத்தாள் வி...
  • 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் TM காலாண்டு வினாத்தா...
  • கருணையுடன் முன்னேறுதல் தமிழ்க் கட்டுரை பேச்சு karu...
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பும் விழிப்புணர்வும் கட்டுரை...
  • இந்தியா 2047 தமிழ்க் கட்டுரை பேச்சு India 2047 tam...
  • தமிழ் மொழி இலக்கியத் திறனறித்தேர்வு மாதிரி வினாத்த...
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பும் விழிப்புணர்வும் தமிழ்க்...
  • ►  September (131)
  • ►  August (174)
  • ►  July (67)
  • ►  June (74)
  • ►  May (70)
  • ►  March (84)
  • ►  February (76)
  • ►  January (100)
  • ►  November (131)
  • ►  October (149)
  • ►  September (122)
  • ►  August (123)
  • ►  July (146)
  • ►  June (118)
  • ►  May (244)
  • ►  April (78)
  • ►  March (232)
  • ►  February (45)
  • ►  January (45)
  • ►  December (47)
  • ►  November (65)
  • ►  October (59)
  • ►  September (79)
  • ►  August (354)
  • ►  July (179)
  • ►  June (135)
  • ►  May (103)
  • ►  April (75)
  • ►  March (65)
  • ►  February (71)
  • ►  January (62)
  • ►  December (33)
  • ►  November (26)
  • ►  October (26)
  • ►  September (37)
  • ►  August (45)
  • ►  July (54)
  • ►  June (30)
  • ►  May (47)
  • ►  March (6)
  • ►  February (21)
  • ►  January (55)
  • ►  December (18)
  • ►  November (27)
  • ►  October (38)
  • ►  September (11)
  • ►  August (17)
  • ►  July (25)
  • ►  June (43)
  • ►  May (21)

environmental safety essay in tamil

  • ஆசிரியர் பக்கம்
  • மாவட்ட வீடியோக்கள்
  • கோயம்புத்தூர்
  • திருச்சிராப்பள்ளி
  • திருவண்ணாமலை
  • தூத்துக்குடி
  • இன்றைய ராசி பலன்
  • வார ராசி பலன்கள்
  • வருட ராசி பலன்கள்
  • கோவில் செய்திகள்
  • சனி பெயர்ச்சி 2022
  • குரு பெயர்ச்சி
  • ராகு கேது பெயர்ச்சி
  • திரைப்படங்கள்
  • தொலைக்காட்சி
  • கிசு கிசு கார்னர்
  • திரைத் துளி
  • திரைவிமர்சனம்
  • ஆரோக்கியம்
  • சமையல் குறிப்புகள்
  • வீடு-தோட்டம்
  • அழகு..அழகு..
  • தாய்மை-குழந்தை நலன்
  • உலக நடப்புகள்
  • கார் நியூஸ்
  • பைக் நியூஸ்
  • கார் தகவல் களஞ்சியம்
  • தொழில்நுட்பம்
  • விளையாடுங்க
  • பிரஸ் ரிலீஸ்

சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு

Environment

காற்று மண்டலம் மாசடைவதை கட்டுப்படுத்துவது மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்த கருத்தரங்கு டெல்லியில் நடந்தது. இதற்கு மத்திய அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் ஏற்பாடு செய்து இருந்தது.

இந்த கருத்தரங்கில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட பல மாநிலங்கள் கலந்து கொண்டு, மாசை கட்டுப்படுத்த தாங்கள் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கைகள் சமர்ப்பித்தன.

தமிழகத்தின் சார்பில் மாசு கட்டுப்பாட்டு வாரியத்தலைவர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டு, அறிக்கை சமர்ப்பித்தார். அப்போது அவர் பேசுகையில்,

தொழிற்சாலைகளில் இருந்து மாசுபட்ட காற்றை நள்ளிரவிலும், அதிகாலையிலும் தான் அதிகமாக வெளியேற்றுகிறார்கள். இதை கண்காணிக்கவும், கட்டுக்குள் கொண்டுவரவும் நவீன யுக்திகளை தமிழக அரசு கையாண்டு வருகிறது.

மேலும், தமிழக அரசு அதி நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்தி மாசடைந்த காற்றால் வாயு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, நிமிடத்துக்கு நிமிடம் விவரங்கள் சேகரிக்கிறது. அந்த விவரங்களின் அடிப்படையில் உடனுக்குடன் நடவடிக்கைகள் எடுக்கிறது. இது மட்டுமின்றி சுற்றுச்சூழலை பாதுகாக்க தமிழக அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளை அவர் விரிவாக எடுத்துரைத்தார்.

அதன் பின்னர் பேசிய அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில்,

வாயு மண்டலம் மாசடைவதை கட்டுப்படுத்த தமிழக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் பாராட்டுக்குரியன. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், முதன்மையான மாநிலமாகவும் திகழ்கிறது. எனவே, தமிழக அரசை பின்பற்றி மற்ற மாநிலங்களும் வாயு மண்டலத்தில் ஏற்படும் மாசை கட்டுபடுத்த வேண்டும் என்று அவர் தமிழக அரசை பாராட்டினார்.

அழிவுகாலம் நெருங்கிடுச்சோ.. தென் கொரியாவிலிருந்து ஷாக் நியூஸ்! ஜப்பான் அணு உலையால் வந்த பிரச்சனை?

சுற்றுச்சூழல்

விடை தெரியாத கேள்வியாக மேம்பாலம்.. சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

விடை தெரியாத கேள்வியாக மேம்பாலம்.. சிங்கபெருமாள் கோவில் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல்

ஆடி கார் மீது லேசாக உரசிய ஓலா கேப்.. ஓட்டுநரை தூக்கிப்போட்டு தாக்கிய உரிமையாளர்.. வீடியோ வைரல்

ஆடி கார் மீது லேசாக உரசிய ஓலா கேப்.. ஓட்டுநரை தூக்கிப்போட்டு தாக்கிய உரிமையாளர்.. வீடியோ வைரல்

"அருந்ததியர்களுக்கு உள்இடஒதுக்கீடு".. எதிர்த்து நிற்கும் திருமா! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பான மனு

"அருந்ததியர்களுக்கு உள்இடஒதுக்கீடு".. எதிர்த்து நிற்கும் திருமா! உச்சநீதிமன்றத்தில் பரபரப்பான மனு

Latest updates.

ஹலோ கடவுள் சாரா.. கொஞ்சம் பெரிய மனசு பண்ணி சந்தோசத்தை அனுப்பி வச்சா நல்லாயிருக்கும்!

  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

environmental safety essay in tamil

  • Click on the Menu icon of the browser, it opens up a list of options.
  • Click on the “Options ”, it opens up the settings page,
  • Here click on the “Privacy & Security” options listed on the left hand side of the page.
  • Scroll down the page to the “Permission” section .
  • Here click on the “Settings” tab of the Notification option.
  • A pop up will open with all listed sites, select the option “ALLOW“, for the respective site under the status head to allow the notification.
  • Once the changes is done, click on the “Save Changes” option to save the changes.

facebookview

  • International
  • current-affairs
  • previous question papers
  • study-materials
  • notifications
  • exam-results

environmental safety essay in tamil

????????????? ???????? ??????? ???????????????? ???????

environmental safety essay in tamil

TNPSC, UPSC ???????????????? Download

????????? ???????????????? Download

????????????:

  • ???? ?????? ??????????? ????????? ???? ???????????? ????????? ????????????????? ???????????????. ??????? ???????? ?????????????? ??????????????????? ???? ???????????????? ????????? ??????????? ?????????? ?????????.
  • ?????????? ?????? ??????? ???? ???????? ?? ??? ?????????? ?????????????.
  • ????????? ???????? ???? ??? ???????? ???? ????????? ????????????. ??????? ??? ???????? ????????????? ?????? ???????.
  • ???? ???????????? ???????? ???? ??????? ????????? ????????????????.?????? ??????????? ??????????? ???????????? ?????? ???????????.

??????????? ?????????????? ??????:

??? ?????? ??????????

  • ????? ????????
  • ???? ????????
  • ?????? ????????
  • ??? ????????
  • ??????? ????????
  • ??????????? ????????

?????? ????????:

  • ???????? ???????? ?????????? ?????????? ?????????????. ?????????? ?? ??????????? ??????????.
  • ????? ???????? 78.09% ???????? 20.95%, ??????? 0.93%, ???????-??-??????? ??????? ??? ??????? ??????? ????????? ????????????.
  • ?????????? ??????? ???????? ???????? ???????????????????.
  • ????????????????? ???????? ???? ??????? ???? ????????? ?????????? ????????????? ????????? ???, ???? ??????? ???? ????????? ????? ?????????.

?????? ??????????? ????:

?????? ??? ???????? ????????????.???

?????? ???????????? ?????? ????????????:

  • ?????? ??????????? ??????????? ????, ???????, ????, ???????-??-??????? ??????? ?? ????????? ???????????????? ???????????? ???? ????????? ???????? ????? ???? ????????? ??????????????????.
  • ??????????????? ??????????? ???????????????? ??????????? ????????????????????? ??????????? ???????-??-??????? ??????? ????? ??????? ???????????? ????????? ????? ??????? ??? ????????????? ?????? ????????????.

???? ?????????????? ?????? ????????????:

  • ??????????? ????????????????? ????????? ???????? ?????????? ????????????????? ???????????????? ????????????? ??????? ???????????.
  • ??????????????????????? ????????????????????? ????? ?????????????????? ????????????????? ????? ??????? ??????????????? ???????????.
  • ???????? ?????????????? ???????? ????????????? ???????? ????? ???????????? ???????? ??????????????? ???????????.

?????? ?????????????? ?????????:

  • ?????? ??????? ??????? ???????
  • ??????????? ??????
  • ??? ????????????,???? ???,???? ??????????,?????� ??????????
  • ??????????? ?????
  • ?????????? ???? ???? ???????? ?????????
  • ????????????? ??????????? ?????????

?????? ?????????????? ?????????????????:

  • ???? ??????? ???? ???? ????????????? ????? ?????????? ???????????? ?????????? ?????? ????????????? ?????????????.
  • ????????? ?????????? ??????????, ???????? ??????????? ?????? ???? ?????????? ????????.
  • ???????? ???????? ?????????????? ??????? ???? ????? ????????? ??????? ???????? ?????????????? ????????? ???????.
  • ???????, ?????????????, ????????????????? ?????????? ???????? ?????? ??????? ??????? ?????????.
  • ?????????? ????????????? ??????????.
  • ????????? ???????? ?????????? ??? ???????? ?????? ??????.

???? ????????????:

  • ??????????????? ??????? ??????????? ????????? ????? ???? ?????. ???? ?????? ??????????????? �???????? ???? ????? ?????? ??? ??????? ???? ???????? ????? ??????????????? ???????????.
  • ???????????? ????? ???????? ???? ???????????? ???????? ????? ?????? ???????? ??????????? ??????????????? ?????? ??????? ??????????????? ?????? ???? ????????? ?????? ?????? ???????? ?????? ????????.

???? ??????????????????? ?????????:

  • ??????: ??? ???????, ?????? ????????, ??????????, ??????????? ???????????? ??????????? ???? ?????????? ???????????. ?????? ??????? ????? ??????????? ??????????? ??????????? ?????? ?????? ???? ???????????????? ???????????????.
  • ???? ????????????: ???????????? ????????, ???????? ????????, ?????? ????? ??????????,??????????,????????????? ??????????? ?????????????. ?????? ????????? ??????????, ?????????????? ????????????? ?????? ??????? ??????? ?????????? ?????????? ?????????? ?????????? ???????????????????, ????????? ????????????, ?????????? ????????????? ?????? ????? ???????? ?????????????????.

???? ?????????????? ?????????:

  • ???? ?????????????? ????????? ??????????????????, ?????????? ??????? ???????, ????????? ??????????????????.
  • ???????????? ??????? ??????????????, ????????????????, ????????????????, ??????????????????? ?????????? ???????.
  • ?????? ???????????? ????????? ??????????? ????????????? ???????? ?????????? ?????????????.

???? ???????????? ?????????????:

  • ????????????????????? ????? ????????
  • ???????????? ????? ????? ????????
  • ????????? ????? ????? ????????
  • ?????????? ????? ????? ????????

???? ???????????? ??????:

  • ????????? ???? ???? ??????????????
  • ???????? ???? ????????????
  • ???????? ???? ??????????
  • ???????? ??????????

???? ?????????????? ?????????????????:

  • ????????? ???????????????, ???????? ??????? ??? ???? ????????????? ??????? ?????????????.
  • ?????? ??????? ????????? ???????????????????.
  • ???????? ????????? ?????? ??????? ???????????????? ???????? ?????? ????????.
  • ??????? ?????????????? ????????? ??????? ????????????? ???????? ????????.

????? ??????????:

  • ???????????????? ???? ??????????????? ?????? ?????? ???????????? ??????? ???????? ??????????? ?????? ?????.
  • ????? ????????????????? ??????????????? ??????????? ?????? ????????? ????????? ??????.??? ???????????? ????? ????? ??????????????.
  • ???? ?????????????? ?????? ?????? ??????? ??????? ???? ?????????? ???? ????? ?????? ??? ???????????? ?????????.

??? ??????????????????? ?????????:

  • ??? ????????????? ??????????? ???? ?????????? ??????????? ??????? ???? ???? ???????? ??????????? ?????????????????? ???????????.
  • ??? ??????? ????????????????? ?????? ???????, ?????? ?????????? ?????????????? ?????????? ???? ?????????????, ???????? ?? ?????????????, ?????????? ?????????????? ??????? ????????????? ????????? ???????????????? ????????.
  • ???????????? ???????? ??????? ????????? ??????????? ?????? ???????? ????????? ????????????????? ???????? ???????????? ??????????.
  • ????????? ???????, ?????????????????, ?????????????? ????????????? ?????????? ?????????????? ??? ???????? ???????????????????.?????????? ???????? ??????????. ?????????? ??????? ???? ??????? ????????? ??????????.

?????? ???????????? ????? ??? ???? ???????????:

  • ???????? ?????????? ?????????? ?????????
  • ?????? ?????? ???????? ??????????????
  • ????? ????????? ??????????? ???????????? ????? ??? ?????????? ????????
  • ????????? ??? ???????? ???????? ????????? ?????????
  • ??????? ????????????????? ??????? ?? ????????
  • ?????? ????????? ?????? ?????? ????????? ?????? ????????? ??????????????
  • ??? ????????? ?????? ??? ??????? ????? ????????? ??? ?????????? ????????? ?????? ??????? ?????????
  • ???? ???????? ??????? ???????? ?? ????????

??? ??????????:

  • ??????? ?????????? ??????? ?????????? ???????? ?????????? ??????? ?? ??????????????? ??? ?????????? ?????????.
  • ??? ?????????????, ???? ???????????? ?????????? ?????????????????????.??? ?????? ???????? ????? ?????? ???????? ??????? ?????????? ????? ???? ?????????????? ??? ???? ???????????.
  • ???? ?????????? ????????? ????? ??? ???? ???????????????? ??????????????.
  • ??? ??????? ???????(Db) ???? ?????? ???????????????.
  • 0 – 30 Db – ??????? ??????? ???
  • 50-55 Db – ????????? ????????? ???
  • 60 – 90 Db � ????????? ???
  • 90 – 95 Db – ????? ??????? ????????? ????????? ?????????????? ???
  • 150-160 Db – ??? ???????????? ????????? ?????? ???????????????? ???

??? ????????? ??????? ?????? ?????????? ???????? ???????????.

  • ??????????? ????????? : ???, ??? ?????? ?????? ??????, ?????, ????????? ???, ???????? ????? ??????, ???? ????????, ???? ??? ???????.
  • ????????????? ?????????: ??????????????? ??????, ??????????? ???????????? (??????? ????????????, ???????, ?????????) ???????.
  • ???????????? ????????? : ???????? ????????????? ??????? ??????????? ?????????? ?????????, ??????? ?????????, ????? ???, ??????????????? ??????? ????? ???, ????????? ?????????????? ??? ???????.

??? ?????????????? ???????? ?????????:

  • ????????? /??????? ??????? ??????
  • ??????? ??????? ??????
  • ?????? ??????? ??????
  • ????????????? ????????

??? ?????????????????:

  • ????????????? ???????? ???????????? ???????, ?????, ???? ??????? ???????????? ???????? ???????????? ????? ?????????.
  • ?????????? ??????? ?????? ???????????? ???????? ????????? ?????? ??? ???????? ????????? ??????????????.
  • ?????????????? ???? ???????? ??????????? ????????? ????????? ?????????????? ????? ?? ??????????????.
  • ?????????????? ?????????? ??? ????????????????? ????????????? ?????????? ?????? ?????????? ???????????? ??????????? ???????? ???????????.
  • ??? ???????????? ???????????????, ?????????? ???????????? ????? ??????? ????? ????? ?????????? ????? ?????? ????? ????????? ????????? ????????.
  • ???? ????? ????? ??????? ????? ????????? ???????????? ?????????? ????? ???? ???????? ??????????.????????? ???????? ?????? ???????? ??????? ?????? ???????? ????????????????? ?????? ?????? ???????????.
  • ???? ??????? ??????? ?????????? ???????????? ????????????????? ???????? ????????? ???????? ??????????.
  • ????????????? ?????? ??????? ???? ???????? ??????. ??????? ????? ??????????? ??????? ???????? ?????????. ????? ????????? ?????????? ??????? ?????????.
  • ?? ???????????? ????????????? ???????????.??? ??????? ??? ????????? ???????????????? ?????? ????????? ??????? ??????? ???????? ????????????? ??????? ???? ????????????? ???????? ???? ??????????????.
  • ????????????????? 1-2 ?????? ????????? ???? ?????????? ??????? ???? ????????????? ???????? ????????????? ?????????? ???????????.
  • ???? ???????? ?????????? ???????????.?????? ??????? ????????? ???????? ????????????? ????????? ?????,?????????? ??????? ?????,???? ?????????? ??????? ?????????????? ?????????? ???????????.?????? ????????????? ??????? ?????? ??????? ???????????? ???????? ???????????.

????? ?????????????????:

  • ?????????????? ?????:??????, ?????????? ??????? ??????????? ?????????????? ???????? ?????????????? ?????????????? ?????.
  • ?????????????? ???????:????????? ??????? ????? ?????? ???????? ????? ???????? ????????? ???????????????? ??????????.
  • ???????????? ??????? ??????? ?????????: ?????????? ???????????????? ????????????? ???????? ???????????? ?????????? ???????? ?????????.

????????? ????????:

  • ??????????? ?????? ??????????, ?????????? ??????? ???? ????? ??? ?????????? ??????? ??????????? ??? ??? ?????? ??????? ???????????????. ???? ??????????? ???? ????????? ?????????????? ??????????.

????????? ???: ?????????????? ???? ???????????, ????????? ??????????? ?? ??? ??????????.

  • ????????? ?????????????? ??????????? ???????? ???????????. ??? ??????? ????????? ????????????.
  • ???? ?????????????? ???? ????????? ????????????. ????? ????????? ??????????? ???? ???? ??????????? ??????????.
  • ??????????????, ??????????? ??????? ??????????? ?????????? ??????? ????????, ????????????? ??????? ????????????, ??? ????? ???????, ????????? ??????? ????????? ?????? ???????? ??????? ???????? ??????????????? ????????????????? ?????????????.

????????? ?????????????? ?????????? ???????:

  • ??????????????? ???????? ?????????? ????? ??????? ??????????? ?????????????? ??????????? ??????? ???????? ?????????.
  • ???????? ??????????????? ??????????? ???????????? ???? ??????? ?????????????? ?????????????? ??????????????.
  • ?????? ?????????? & ????? ?????????? ??????? ??? ??????? ???????????? ????????? ????????????????????.
  • ???????? ???????? ???????????????????? ??????? ???????? ???? ??????????????? ???????????. ?????? ??? ?????? ???????? ??????? ???????????.
  • ???????? ???????? ?????? ??????? ?????????? ??????????? ??????? ???????????. ??????????? ???????????? ??? ??????????? (stratosphere) ???? ??????????? ???????? ????????? ??????? ???? ??????? ?????? ???????????.
  • ???? ???????????? ?????????? (x – ?????) ??? ????????????? ??????? ????????? ??????? ????????????? ?????? ????????????? ?????????.
  • ?????? ??? ?????? ??????, ???????? ??????? ???????????, ???? ?????????? ??????? ????????? ????? ??????? ??????????. Sr-90 ?????? ????????????? ??????. ??? ?????????? ?????? ??????? ?????? ???? ??????????????.

PDF Download

Download banking awareness pdf, to follow� �channel ��� .

environmental safety essay in tamil

LEAVE A REPLY Cancel reply

Save my name, email, and website in this browser for the next time I comment.

EDITOR PICKS

வார இறுதி நாளையொட்டி 865 சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. போக்குவரத்துக்கழகம் அறிவிப்பு, நகை பிரியர்களுக்கு ஹாப்பி… “தங்கம் விலை திடீர் சரிவு.. ” விலை நிலவரம் உள்ளே”.., தமிழகத்தில் நாளை (31.08.2024) முழு நேர மின்தடை.. உங்க ஏரியா லிஸ்ட்ல இருக்கானு பாருங்க, popular posts, (job news) 2020, tnpsc , 30 2020, popular category.

  • notifications 32609
  • Entertainment 8335
  • current-affairs 3152
  • Instagram 1399
  • exam-results 1080
  • Education 1035

Academia.edu no longer supports Internet Explorer.

To browse Academia.edu and the wider internet faster and more securely, please take a few seconds to  upgrade your browser .

Enter the email address you signed up with and we'll email you a reset link.

  • We're Hiring!
  • Help Center

paper cover thumbnail

Environmental Pollution and Health Problems (Tamil).pdf

Profile image of Fowzul Ameer

Loading Preview

Sorry, preview is currently unavailable. You can download the paper by clicking the button above.

  •   We're Hiring!
  •   Help Center
  • Find new research papers in:
  • Health Sciences
  • Earth Sciences
  • Cognitive Science
  • Mathematics
  • Computer Science
  • Academia ©2024

Environment Safety Essay

Introduction.

Children might have seen the black smoke rising from the chimneys of factories and industries. Even the sight of dumping harmful chemicals into water bodies is disturbing for them, and they wonder how much harm we are doing to the environment . Through this environment safety essay, we can teach our children how to protect and save our environment.

Environment safety is the greatest need of today as the state of the environment is collapsing each passing day. We, humans, take everything we want from it, reaching a point where there will be no environment for the future generation to live in. Environment safety thus aims to reduce the damage done to the environment by following the best practices. This short essay on environment safety will be useful for children to understand more about the topic. They will also be able to write an essay by using this environment safety essay as a reference.

Environment Safety Essay

Importance of Environment Safety

In this part of the short essay on environment safety, we will see why it is important to follow proper environment safety measures. Humans have a long history of looting and plundering, and it is the same in the case of the environment as well. Surely, all the things made in factories or produced in industries make our lives smoother. But will it be fine to live in the same space, inhaling harmful gases and drinking untreated water ?

The environment safety essay teaches us that our actions can seriously affect the environment. So, to save our natural resources, we must bring down the human impact on them. The short essay on environment safety will delve into this matter deeply.

Both companies and individuals come forward in this mission to create a safe environment for all. Our environment is on the verge of degradation, and we are all responsible for it. Although we cannot undo the damage we have done, we can be more careful in how we treat the waste and not pollute the air.

Ways to Ensure Environment Safety

Since we have understood how making a product with less environmental impact will be beneficial, we will now see other ways to ensure environment safety in this short essay on environment safety. Environment safety is practised at the organisational level where the companies implement certain policies and rules to limit the disposal of pollutants in the environment. Through this, they also ensure the safety of employees and workers in the company.

Individuals working in factories and industries are often exposed to working in harsh conditions and with harmful chemicals. As they are at risk of getting many diseases, companies should put forward control solutions to minimise their exposure to such hazards. Substituting the harmful chemicals with less severe ones is another effective way to ensure environment safety. Besides, providing proper ventilation in the working areas could prevent the dispersion of contaminants.

The environment safety essay provided by BYJU’S will help children realise the significance of environment safety. They will be able to easily write an essay on the topic from the points discussed in this article.

Frequently Asked Questions on Environment Safety Essay

What is meant by environment safety.

Environment safety deals with a set of policies followed to ensure that the surrounding environment is free from danger and that people are safe to live or work there.

How will the short essay on environment safety help children?

Children will be aware of environment safety through this essay provided by BYJU’S. They will be able to speak or write on the topic as this essay is easily understandable and covers most of the important points.

Leave a Comment Cancel reply

Your Mobile number and Email id will not be published. Required fields are marked *

Request OTP on Voice Call

Post My Comment

environmental safety essay in tamil

Register with BYJU'S & Download Free PDFs

Register with byju's & watch live videos.

தின தமிழ்

குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு கட்டுரை – Road Safety Essay in Tamil

Photo of dtradangfx

சாலை பாதுகாப்பு கட்டுரை – Road Safety Essay in Tamil :- சாலை பாதுகாப்பு என்பது மனிதர்களுக்கு மிக முக்கிய பாதுகாப்பு அம்சங்களின் ஒன்றாகும் .நீங்கள் வாகனம் ஓட்டினாலும் ஓட்டாமல் நடந்து சென்றாலும் இந்த பாதுகாப்பு அம்சங்களை பின்பற்றுதல் மிக முக்கிய கடமைகளில் ஒன்றாகும் .

மாணவர்கள் மற்றும் குழந்தைகளே சாலைப்பாதுகாப்பு விதிமுறைகள் பற்றி அறியாமல் அதிகம் பாதிக்க படுகின்றனர் .சிறு காயங்கள் முதல் மிக பலத்த பாதிப்புகள் வரை குழந்தைகளுக்கு பெரியோர்கள் அல்லாது பயணிக்கும் போது ஏற்படுகிறது ,இவற்றை தடுக்க சாலை பாதுகாப்பு விதிகளை நாம் அன்றாட கல்வி முறை மற்றும் கற்பிக்கும் முறைகளில் இணைப்பது முதல் இன்றியமையாத ஒன்றாகவும்.அவ்வாறு சாலை பாதுகாப்பை குழந்தைகளுக்கு கற்பிப்பது பெற்றோர் மட்டுமல்லாது பெரியோர்களாகிய நமது கடமைகளில் ஒன்றாகும்

குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு கட்டுரை - Road Safety Essay in Tamil

குழந்தைகளுக்கு சாலைப்பாதுகாப்பு பற்றி கற்பிப்பதின் தேவை

இன்றைய காலகட்டத்தில் சாலை விபத்துக்களின் பட்டியலில் அதிகம் பாதிக்க படுவது குழந்தைகள் என்பது தவிர்க்க முடியாத செய்தியாகும் .அந்த வயதில் இருக்கும் குழந்தைகளுக்கு பெரியோர் உதவி இன்றி பயணம் செய்யும் வழக்கத்தை ஏற்படுத்துவதற்கு முன் சாலை மற்றும் வாகன பராமரிப்புக்கு முன்னதாகவே சாலை பாதுகாப்பு அம்சங்களை கற்பிப்பது நமது தலையாய கடமையாகும் .பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகளுக்கு பெரியோர்கள் செய்யும் சாலை தவறுகளினால் ஏற்படும் அபாயத்தை எடுத்துரைப்பதும் ,நாம் செய்யும் சிறு தவறும் எப்போதும் திருத்தி அமைக்க முடியாத விளைவுகளை ஏற்படுத்தும் என்பதையும் நாம் அவர்களுக்கு கற்பிக்க வேண்டும்

குழந்தை விபத்து ஏற்பட காரணம்

  • குழந்தை மனநிலை என்பது எப்போதும் ஓர் நிலையில் இருப்பதில்லை இதன் காரணமாக தன்னிலை மறக்கும் குழந்தையின் நோக்கம் தனது பயணத்தின் மீதே இருக்கிறது ,இது போன்ற சூழ்நிலைகளில் அடுத்தவர் செய்யும் சிறு பிழை குழந்தைகளையே பாதிக்கிறது
  • வாகனத்தின் வேகம் மற்றும் திறன் பற்றிய சரியான கணிப்பு ஒரு குழந்தைக்கு அமைவதில்லை
  • வாகன ஓட்டிகள் குழந்தைகளின் மனநிலையை புரிந்து கொள்ள முடியாது
  • வாகன ஓட்டிகளின் கண்களுக்கு சிறுவர்களின் இருப்பு எப்போதும் சரியாக தெரிவதில்லை
  • சாலையை கடக்க பொறுமையை கடைபிடிக்க குழந்தைகளுக்கு கற்று கொடுத்தபோதிலும் பெரியோர்கள் வேகமாக செல்வதை போல் தாமும் செல்ல முயல்வதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன
  • தனது நிலை மாறும் பொது மற்றவரை அபாயத்தின் தன்மையை அறியப்படும் பெரியோர்களின் செயல் குழந்தைகளிடம் காணப்படுவதில்லை

குழந்தைகளுக்கான சாலை பாதுகாப்பு வழிமுறைகள்

சாலைபத்துகல்லில் பல அம்சங்கள் இருந்த போதிலும் கீழே கொடுக்க பட்டுள்ள விதிகள் குழந்தைகளுக்காகவே எழுத பட்டதாகும் ,இவற்றில் விதியாக இல்லாத போதிலும் குழந்தைகளின் நலனை காப்பதற்கான செயல்களும் அடங்கும்

  • பெற்றோருடன் பயணம் செய்வதே மிக பாதுகாப்பானது என்பதை அறியவைத்தல்
  • பெற்றோர் இல்லாத நேரத்தில் நம்பிக்கை உடையவர் உதவியை நாடுவது குறித்து சொல்லி கொடுத்தால்
  • சாலை கடக்கும் விதிகள் மற்றும் எங்கே கடக்க வேண்டும் என்ற தகவல்களை கற்பித்தல்
  • சாலை எவ்வாறு உள்ளது என்பதை கணிக்கும் திறனை வளர்த்தல் ,குறிப்பாக பழுதான சாலை,ஈரமான சாலை ,அதிக வாகனங்கள் நிறுத்தி வைக்க பட்டுள்ள சாலைகள் போன்றவற்றை எவ்வாறு அணுகுவது என்ற தகவலை சொல்லிக்கொடுத்தல்
  • சாலை பராமரிப்பு விளக்குகள் மற்றும் சைகை பலகைகளை இனம் காணுதல் பற்றிய அறிவு வளர்த்தல்
  • சாலையை பயன்படுத்தும் முன் முழு கவனத்தையும் ஒன்றுபடுத்துதல் பற்றி எடுத்துரைப்பது
  • சாலையில் வரும் வாகனத்தின் வேகம் எதுவாக இருந்தாலும் பொறுமையுடன் இருப்பது மிக முக்கியம் என்பதை எடுத்துரைப்பது
  • தற்போதைய அறிவியல் வளர்ச்சியினால் தொலைத்தொடர்பு சாதனமான ஸ்மார்ட் போன் பயன்படுத்தி பாட்டு கேட்டு கொண்டு சாலையில் இருப்பதன் ஆபத்தை எடுத்துரைத்தல்
  • ஸ்மார்ட் போன் பயன்படுத்தி கொண்டே வாகனம் இயக்குவது மரணம் ஏற்படும் ஆபத்தை உருவாக்கும் என்பதை தெரிவித்தல்
  • பாதுகாப்பு பொருட்களாகிய தலைக்கவசம் இல்லாமல் சைக்கிள் கூட ஓட்ட கூடாது என்பதை தெரிவித்தால்

Photo of dtradangfx

Subscribe to our mailing list to get the new updates!

Lorem ipsum dolor sit amet, consectetur.

அரையாண்டு விடுமுறை அல்லது பண்டிகை கால விடுமுறை கிடைக்குமா

Suthanthira thinam katturai in tamil |independence day katturai in tamil, related articles, துரித உணவுகள் நன்மை தீமைகள் – fast food advantages and disadvantages, 5g நன்மை தீமைகள் – 5g pros and cons, முயற்சி திருவினையாக்கும் கட்டுரை-essay on efforts, எனக்கு பிடித்த உணவு கட்டுரை-my favorite food essay in tamil-தோசை கட்டுரை, one comment.

  • Pingback: தமிழ் கட்டுரை தலைப்புகள் - தமிழ் நியூஸ் | தமிழ் செய்திகள்
  • எனக்கு பிடித்த உணவு கட்டுரை-My Favorite Food Essay in Tamil-தோசை கட்டுரை July 4, 2023

IMAGES

  1. Save Earth Essay In Tamil

    environmental safety essay in tamil

  2. Save Earth Essay In Tamil

    environmental safety essay in tamil

  3. Save Earth Essay In Tamil

    environmental safety essay in tamil

  4. Essay on Environment

    environmental safety essay in tamil

  5. Save Earth Essay In Tamil

    environmental safety essay in tamil

  6. Save Earth Essay In Tamil

    environmental safety essay in tamil

VIDEO

  1. எப்படி Electronic Stability Control உங்கள் உயிரை காப்பாற்றுகிறது ?

  2. 2023 A/L Physics

  3. What is Sustainability

  4. Road Safety Essay Writing

  5. நுகர்வோர் பாதுகாப்பு|Class 2-5|எளிய வரி கட்டுரை|Short Essay|Tamil Essay|Nugarvor Padhugappu

  6. Essay 5 : Safety, Health and Environment

COMMENTS

  1. சுற்றுச்சூழல் பாதுகாப்பு

    A detailed look at the three disciplines, environmental ethics, law and education to determine which plays the most critical role in environmental enhancement and protection.

  2. சுற்றுச் சூழலியலை காக்க 20 வழிகள்...! #WhereIsMyGreenWorld

    எனவே டெல்டா மாவட்டங்களை விவசாயப் பாதுகாப்பு மண்டலங்களாக அறிவிக்க வேண்டும். 20 Suggestions for government to Protect the Environment

  3. Sutru Sulal Katturai in Tamil

    Sutru Sulal Pathukappu in Tamil Katturai: சுற்று சூழல் மாசடைவதற்கு மனிதர்களாகிய நாம் தான் முக்கிய காரணம்.

  4. உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day in Tamil)

    ஜூன் 5 - உலக சுற்றுச்சூழல் தினம் (World Environment Day in Tamil) ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 5ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

  5. காடுகளை பாதுகாத்தல் கட்டுரை-Save Forest Essay in Tamil

    காடுகளை பாதுகாத்தல் கட்டுரை-Save Forest Essay in Tamil:- காடுகள் நாம் உயிர்வாழ்வதற்கு மிக முக்கிய காரணியாக திகழ்கிறது .நாம் வாழும் பூமியை ...

  6. சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை

    சுற்றுச்சூழல் பாதுகாப்பு கட்டுரை | Essay on Environment in Tamil #essay #essaywriting #essayintamil

  7. பூமியை பாதுகாக்கும் பொறுப்பு மாணவர்களுக்கு உண்டு: இயற்கை வி்ஞ்ஞானி

    பூமியை பாதுகாக்கும் பொறுப்பு மாணவர்களுக்கு உண்டு: இயற்கை வி்ஞ்ஞானி நம்மாழ்வார் By Sutha Published: Wednesday, January 26, 2011, 11:29 [IST] Subscribe to Oneindia Tamil

  8. நீர் பற்றிய கட்டுரை

    நீர் வளம் பற்றிய கட்டுரை | Neer Patri Katturai. மனிதனுக்கு இயற்கையின் வரமாக கிடைத்தது நிலம், நீர், காற்று. இவை மூன்றும் இன்றி உலகம் இயங்காது ...

  9. இயற்கையை பாதுகாப்போம்

    Do you love nature? Nature is the only one thing to protect all the lives in the world. Let's see how to save nature in Tamil.

  10. Environment protection in tamil

    சுற்றுச் சூழல் பாதுகாப்பு (Environment protection in tamil) Indigenous Specie Protection Restoring homes to indigenous fauna - Australia

  11. சுற்றுச்சூழல் பாதுகாப்பும் விழிப்புணர்வும் கட்டுரை Environmental

    சுற்றுச்சூழல் பாதுகாப்பும் விழிப்புணர்வும் கட்டுரை Environmental protection and awareness Tamil essay சுற்றுச்சூழல் பாதுகாப்பும் விழிப்புணர்வும் முன்னுரை

  12. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்

    சுற்றுச்சூழல் பாதுகாப்பில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் பாராட்டு By Sutha Published: Thursday, July 22, 2010, 14:48 [IST] Subscribe to Oneindia Tamil

  13. Environmental pollution and control

    Environmental pollution and control is very important topic in all competitive exams.

  14. Essay on Environment protection

    Essay on Environment protection - Tamil medium Kavin English Learning 4.1K subscribers Subscribed 4 311 views 1 year ago Essays

  15. Environmental Pollution and Health Problems (Tamil).pdf

    Environmental Pollution and Health Problems (Tamil).pdf Fowzul Ameer See Full PDF Download PDF

  16. Environment Safety Essay

    Environment Safety Essay - The short essay on environment safety will introduce children to practices and measures to protect our surroundings and ensure the well-being of people.

  17. குழந்தைகளுக்கு சாலை பாதுகாப்பு கட்டுரை

    சாலை பாதுகாப்பு கட்டுரை - Road Safety Essay in Tamil :- சாலை பாதுகாப்பு என்பது மனிதர்களுக்கு மிக முக்கிய பாதுகாப்பு அம்சங்களின் ஒன்றாகும் ...

  18. சுற்றுச்சூழல் பாதுகாப்பும் விழிப்புணர்வும் கட்டுரை Environmental

    சுற்றுச்சூழல் பாதுகாப்பும் விழிப்புணர்வும் கட்டுரை Environmental protection and awareness essay

  19. Environmental security

    According to Jon Barnett, environmental security emerged as an important concept in security studies because of some interrelated developments which started in 1960s. The first one was the increasing level of environmental consciousness in so called developed countries. [6] Various occurrences and events triggered the growth of the environmental movement during this period of time.

  20. PDF World Bank Document

    Builders and Developers convicted by the Indian court of law, in the past 5 years, on ESG aspects such as financial fraud, inappropriate employment and labour practices, safety, unauthorized construction, and/or non-compliance to the National and/or Tamil Nadu State environmental and labour laws.

  21. Essay on environmental protection and our role in tamil

    Brainly.in. chevron down. We're in the know. youtube. Essay on environmental protection and our role in tamil - 8157282.

  22. Environmental Protection Essay for Students in English

    Essay on Environmental Protection Environmental protection is improving, defending, and maintaining the quality of the environment. The main methods of environmental protection are recycling, reusing, and reducing; however, some other methods such as Green Energy production, green transportation development, and eco-friendly industrialization also exist. Not only residents but also businesses ...